Search This Blog

30/07/2022

காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு முதல் தங்கம்



 பர்மிங்ஹாம்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இரண்டாவது நாளான இன்று இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றது. இன்று நடந்த பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். குருராஜா என்பவர் வெண்கலம் வென்றிருந்தார்.

முதல் தங்கப் பதக்கம்

இதனிடையே, இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார். ஸ்நாட்ச் பிரிவில் மற்ற வீராங்கனைகள் 80 கிலோ வரை எடையை தூக்க, மீராபாய் சானு முதல் முயற்சியிலேயே 84  எடையை தூக்கி அசத்தினார்.



மூன்றாவது முயற்சியில் 90 கிலோ எடையை தூக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. என்றாலும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவு உட்பட ஒட்டுமொத்தமாக 198 கிலோ எடையை தூக்கி பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்க மங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

28/07/2022

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்.




 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  இன்று தொடக்கம்

 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். 



🙏

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

 


பர்மிங்காம்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.


18-வது முறையாக இந்த போட்டியில் கால்பதிக்க இருக்கும் இந்தியா இதுவரை 181 தங்கம் உள்பட 503 பதக்கங்கள் வென்று காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 2002-ம் ஆண்டில் 69 பதக்கமும், 2006-ம் ஆண்டில் 50 பதக்கமும், 2010-ம் ஆண்டில் 101 பதக்கமும், 2014-ம் ஆண்டில் 64 பதக்கமும், 2018-ம் ஆண்டில் 66 பதக்கமும் இந்தியா வென்று அசத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.


27/07/2022

IIT Madras offers free 12-week online course on robotics for students. Last Date -1/8/2022

 


IIT Madras offers free 12-week online course on robotics for students

Introduction to robotics

By Prof. Asokan T, Prof. Balaraman Ravindran, Prof. Krishna Vasudevan | IIT Madras


ABOUT THE COURSE :

This course is a bridge-course for students from various disciplines to get the basic understanding of robotics. The mechanical, electrical, and computer science aspects of robotics is covered in this introductory course.


INTENDED AUDIENCE : Undergraduate/graduate students interested in robotics

Summary

Course Status : Upcoming

Course Type : Core

Duration : 12 weeks

Start Date : 25 Jul 2022

End Date : 14 Oct 2022

Exam Date : 30 Oct 2022 IST

Enrollment Ends : 01 Aug 2022

Category : 

Design Engineering

Robotics

Credit Points : 3

Level : Undergraduate/Postgraduate


Course layout

Week 1: Introduction to robotics- History, growth; Robot applications- Manufacturing industry, defense, rehabilitation, medical etc., Laws of Robotics

Week 2: Robot mechanisms; Kinematics- coordinate transformations, DH parameters

Week 3: Forward kinematics, Inverse Kinematics

Week 4: Jacobians, Statics, Trajectory Planning

Week 5: Actuators (electrical)- DC motors, BLDC servo motors

Week 6: Sensors , sensor integration

Week 7: Control – PWM, joint motion control, feedback control

Week 8: Computed torque control

Week 9: Perception, Localisation and mapping

Week 10:Probabilistic robotics, Path planning, BFS; DFS; Dijkstra; A-star; D-star; Voronoi; Potential Field; Hybrid approaches

Week 11: Simultaneous Localization and Mapping

Week 12:Introduction to Reinforcement Learning



Books and references

Robert J Schilling, Fundamentals of Robotics, Prentice Hall India, 200

John J Craig, Introduction to Robotics, Prentice Hall International, 2005


Course certificate

The course is free to enroll and learn from. But if you want a certificate, you have to register and write the proctored exam conducted by us in person at any of the designated exam centres.

The exam is optional for a fee of Rs 1000/- (Rupees one thousand only).

Date and Time of Exams: 30 October 2022 Morning session 9am to 12 noon; Afternoon Session 2pm to 5pm.

Registration url: 

https://onlinecourses.nptel.ac.in/noc22_de11/preview 

Announcements will be made when the registration form is open for registrations.

The online registration form has to be filled and the certification exam fee needs to be paid. More details will be made available when the exam registration form is published. If there are any changes, it will be mentioned then.

Please check the form for more details on the cities where the exams will be held, the conditions you agree to when you fill the form etc.


CRITERIA TO GET A CERTIFICATE

Average assignment score = 25% of average of best 8 assignments out of the total 12 assignments given in the course.

Exam score = 75% of the proctored certification exam score out of 100


Final score = Average assignment score + Exam score


YOU WILL BE ELIGIBLE FOR A CERTIFICATE ONLY IF AVERAGE ASSIGNMENT SCORE >=10/25 AND EXAM SCORE >= 30/75. If one of the 2 criteria is not met, you will not get the certificate even if the Final score >= 40/100.


Certificate will have your name, photograph and the score in the final exam with the breakup.It will have the logos of NPTEL and IIT Madras .It will be e-verifiable at nptel.ac.in/noc.


Only the e-certificate will be made available. Hard copies will not be dispatched.

Once again, thanks for your interest in our online courses and certification. Happy learning.


- NPTEL team


Enroll Now👉 Click Here


🙏

24/07/2022

அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு.

 இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் . சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான   தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🙏


23/07/2022

Diploma படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு.

Diploma படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

டிப்ளமோ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


முன்னதாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பி.இ., கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிறது 27ந் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மாணவர்களும், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். 

அதன்படி 12ம் வகுப்பு தேர்வு முடிவை சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து உயர்கல்வித் துறை சார்பில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




21/07/2022

TNPSC Group I Announced, Last Date :22/8/2022

 துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27ந்தேதி முதல் 29ந் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 30-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Apply online👉www.tnpsc.gov.in


🙏


JEE Mains second session will be held from July 25 onwards. Admit card Released.

 

JEE Main 2022: The JEE Mains second session will be held from July 25 onwards. The candidates will soon be able to download their admit cards at the official website jeemain.nta.nic.in


🙏


15/07/2022

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசிநாள்:18/7/2022 ஆக நீட்டிப்பு.

 உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

14/07/2022

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Download hall ticket

👇

https://www.tnpsc.gov.in/

🙏




உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு. கடைசி நாள்: 5/8/2022

 


உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்  ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்: 5/8/2022.


சென்னை: தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2022-23ம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வலைத்தளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப்படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு அனுப்பப்பெறுதல் வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 5ம் தேதி ஆகும். மேலும் கூடுதல் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


👉மாணவர் சேர்க்கை விவர கையேடு


🙏



12/07/2022

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை . கடைசி நாள்: 29/7/2022


 



ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.


இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப்பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 12.07.2022 முதல்‌ 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த நிகழ்வினை சட்டம்‌, நீதிமன்றங்கள்‌, சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ ஊழல்‌ தடுப்புச்‌ சட்டத்‌ துறை அமைச்சர்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தர்‌ எஸ்‌.ரகுபதி இன்று (12.07.2022) காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைத்தார்.

மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும்‌ முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்‌ தேதிகள்‌ பல்கலைக்கழக இணையதளத்தில்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்.‌"

இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளுக்கும் இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி ஆகும்.

அதேபோல தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகிய இடங்களில் பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் இன்று முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.tndalu.ac.in/


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.



11/07/2022

NEET UG Hall Ticket Release Today 11.30 am at neet.nta.nic.in .

 


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீட் தேர்வுக்கு 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பெண்கள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 ஆண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள்.

இந்த புள்ளி விவரங்களை கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகமான பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் ஒருவாரமே முழுமையாக உள்ளதால், தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கேற்றபடி, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வழக்கமாக தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதில், குளறுபடிகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை எப்படி தேர்வு மையங்கள் அமைத்து இருக்கின்றன? என்பது இன்று தெரிந்துவிடும்.


நாளை Hall ticket வெளியிட பட இருக்கிறது. 


பதிவிறக்கம் செய்ய

👇


https://neet.nta.nic.in/


All the Best. 


🙏

08/07/2022

பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது.

 


தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் அரசின் வேலைவாய்ப்பு துறை அலுவலகங்களில் தங்களை பதிவு செய்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் செய்யப்படும்.

இதனுடன், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாட்களில் இருந்து வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு எண் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், இனி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான

 www.tnvelaivaaaippu.gov.in

என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.



Register on-line 

👇

www.tnvelaivaaaippu.gov.in

🙏


CBSE RESULT தாமதத்தால் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ஆம் தேதி கடைசி நாளாக நீட்டிப்பு.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 08) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று (ஜூலை 07) கடைசி நாள். பொறியில் படிப்பிற்கு விண்ணப்பம்  17ஆம் தேதி கடைசி நாள்.

ஆனால், இன்னும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த மாணவர்களும் பயனடைய வேண்டும். அதன் பொருட்டு CBSE தேர்வு வெளியாகும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாள்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதில் ஆளுநர் தான் தேதி ஒதுக்க வேண்டும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும். 3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.


481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்

 



481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்

ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது.

இந்த சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியாகின. அன்றில் இருந்தே பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2-ஆவது இடத்தில் குரோம்பேட்டை எம்ஐடி வளாகக் கல்லூரி இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியும், 4ஆவது இடத்தில் செங்கல்பட்டு சிவசுப்பிரமணிய நாடார் (எஸ்எஸ்என்) தனியார் கல்லூரியும் உள்ளன.

அதேபோல, கோயம்புத்தூர் சிஐடி கல்லூரி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 6ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் தனியார் கல்லூரியும் 7ஆவது இடத்தில், கோயம்புத்தூர் சிஐடி கல்லூரியும் உள்ளன.

PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி 8ஆவது இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரி 9ஆவது இடத்திலும் கோயம்புத்தூர் குமரகுரு தனியார் கல்லூரி 10ஆவது இடத்திலும் உள்ளன.

அதேபோல 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓசி பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கல்லூரி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தரவரிசை

பட்டியல்

👇

https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf



🙏



07/07/2022

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கடைசி நாள்: 8/8/2022


 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்து கொண்டு நடப்பு கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதல்வர்கள், இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் 08.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.annamalaiuniversity.ac.in


Apply  online All Streams 

👇

https://annamalaiuniversity.ac.in/adm/index.php


Five year integrated pg course's

👇

https://annamalaiuniversity.ac.in/adm/pgint_courses.php



🙏



ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம். Last Date: 8/8/2022


மீன்வளப் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா பெயரில் அழைக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமைந்துள்ளன. 11 கல்லூரிகளும் 47 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 600 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,500 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc)
இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc) மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.

அவை முறையே,

பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (FITT) சென்னை ஆகும்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதோடு மீன்வளத் துறையின் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க பல தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இப்பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும்

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வளப் படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம்.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா ன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மீன்வளப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க http://tnjfu.ac.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் 04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Apply online 👉 http://tnjfu.ac.in



🙏



அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 62 சதவீத மாணவர்கள் தோல்வி

 


அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 38 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.

06/07/2022

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


 

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

 மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்

🔰🔰🔰🔰🔰


🙏