Search This Blog

08/07/2022

CBSE RESULT தாமதத்தால் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ஆம் தேதி கடைசி நாளாக நீட்டிப்பு.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 08) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று (ஜூலை 07) கடைசி நாள். பொறியில் படிப்பிற்கு விண்ணப்பம்  17ஆம் தேதி கடைசி நாள்.

ஆனால், இன்னும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த மாணவர்களும் பயனடைய வேண்டும். அதன் பொருட்டு CBSE தேர்வு வெளியாகும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாள்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதில் ஆளுநர் தான் தேதி ஒதுக்க வேண்டும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும். 3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.


No comments:

Post a Comment