THIRUVAIMATHS
பொறுப்பும் கடமையும்
22/07/2026
2027 ‘GATE' தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது
12/07/2026
‘ஆயுஷ்’ படிப்புக்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அறிவிப்பு, கடைசி நாள்: 31-7-2026
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.
சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது www.tnayushselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நாளை (ஜூலை 13) தொடங்குகிறது. இம்மாதம் 31-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப் பிக்கலாம்.
நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்போது, நீட் தேர்வு ஹால் டிக்கெட் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம், நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் மத்திய அரசிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்றுக் கொள்ளப்படும்.
யோகா - இயற்கை மருத்துவம்: சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் கல்லூரிகளும் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கும் (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட இணையதளத்தில் நாளை முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இதற்கு கிடையாது.
சிறப்பு பிரிவினருக்கு.. மேற்கண்ட 5 வகையான ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு சிறப்பு பிரிவில் (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
02/07/2026
பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு.கடைசி நாள் ஜூலை 15.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்கள் உள்ளன. இதில், பொறியியல் டிப்ளமா முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 15-ல் தொடங்கியது. கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி. கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறியலாம்.
21/06/2026
TN PARAMEDICAL ADMISSION ONLINE REGISTRATION STARTS ON 21-6-2027 12P.M, ENDS ON 3-7-2026 5 P.M.
PARAMEDICAL DEGREE COURSES
LAST DATE: 3-7-2026, 5 PM
| DEGREE COURSES |
|---|
|
👉CLICK HERE TO APPLY FOR DIPLOMA IN GENERAL NURSING AND MIDWIFERY (DGNM) COURSE 2026 - 2027 SESSION
👉CLICK HERE TO APPLY FOR AHS DEGREE COURSES 2026 - 2027 SESSION
👉CLICK HERE TO APPLY FOR PHARM. D (Doctor of Pharmacy) DEGREE COURSE 2026 - 2027 SESSION
👉 CLICK HERE TO APPLY FOR DIPLOMA IN PHARMACY COURSE 2026 - 2027 SESSION
👉 PROSPECTUS FOR ADMISSION TO PHARM.D DEGREE COURSE 2026-2027 SESSION
MORE INFO CONTACT
👉https://tnmedicalselection.net/Notification.aspx
👉ONLINE APPLICATON PORTAL : https://regpmc.tnmedicalonline.co.in/pmc26/
🙏
'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என பெயர் மாற்றம்.
🔰🔰🔰🔰🔰🔰
https://www.tnskill.tn.gov.in/
தி.மு.க., அரசால் தொடங்கப்பட்ட, 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர், 'திறன் தமிழ்நாடு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில், 2022ல், 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பது. தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.தற்போது அமைந்துள்ள புது அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் உள்ள பெயரை, 'திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்' என, மாற்றியுள்ளது. அதோடு, மே 15ம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.
🙏
17/06/2026
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கும் அவகாசம் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 60 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், உணவு தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்புக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. 3 பி.டெக். பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்புக்கு 10,678 பேர், பி.டெக். படிப்புகளுக்கு 5,356 பேர் என மொத்தம் 16,034 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெளிநாட்டினர். வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள், அவர்களது நிதி ஆதரவு பெற்றவர்களுக்கு இந்த கெடு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனைத்து படிப்புகளுக்கும் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
🙏🏼
12/06/2026
TANUVAS(B.V.Sc & B.Tech) Admission 2026 -LAST DATE 17-6-2026
Students Admission to UG Programmes
Admission to UG Degree programmes [For B.V.Sc. & A.H., B.Tech. (Food Technology), B.Tech. (Dairy Technology) Courses) and B.Tech. (Poultry Technology)] is in progress.
The Online Portal for PG Programmes is Open Now.
பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 17 வரை நீட்டிப்பு.
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 17-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் 5 முதல் 15-ம் தேதி வரை பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆங்கிலம், உயிரியல், கணிதம் பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை ஜூன் 12-ம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் ஜூன் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல்: விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள்; ஜூலை 20,2026
பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27-ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் (Diploma in Co-operative Management) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். குறைந்தபட்சம் 17 வயதுபூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.
ஆன்லைனில் மட்டும்..
தகுதியுடைய நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ தபால் மூலமோகூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஆக.3-ல் வகுப்பு தொடக்கம்
பயிற்சிக்காலம் ஓராண்டு. 2 செமஸ்டர்களை உள்ளடக்கியது. பயிற்சிக் கட்டணம் ரூ.20,750. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்கள் தமிழ்வழியில் மட்டும் நடத்தப்படும். வகுப்புகள் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும். கூடுதல் விவங்களுக்கு 90427-17766 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர் பதவியிலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளில் சேரவும் ஆவின் நிறுனத்தில் நிர்வாகி பணியிடத்தில் சேரவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டியதுகட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி கட்டண விவரம்
| விவரம் | தொகை (ரூ) |
|---|---|
| கற்பிப்புக் கட்டணம் | 8,000 |
| விண்ணப்பப் படிவம் (ம) பதிவுக் கட்டணம் | 100 |
| நாட்குறிப்பு கட்டணம் | 300 |
| எழுது பொருள் கட்டணம் | 600 |
| தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ் | 2,500 |
| புத்தக கட்டணம் | 2,000 |
| நூலக காப்பீடு தொகை (திரும்ப வழங்க வேண்டியது) | 300 |
| தபால் கட்டணம் | 207 |
| கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோவா ப்பரேஷன் இதழ்களுக்கு | 500 |
| விளையாட்டுக் கட்டணம் | 150 |
| கணினி பயிற்சி கட்டணம் | 1,500 |
| நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் | 4,543 |
| அடையாள அட்டை | 150 |
| மொத்தம் | 20,850 |
கட்டணம் செலுத்தும் முறை:
- விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/- (Online Payment only)
- பயிற்சி கட்டணம்: ரூ. 20,750/- (Online Payment only)
- மொத்த கட்டணம் ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
- கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது.
- பயிற்சி நிலைய இடமாற்றம் அனுமதிக்கப்படாது.
பயிற்சிக்கான திட்டங்கள்
புதிய பாடத்திட்டத்தின்படி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக இரண்டு பருவ முறைகளாக (Semester I & II) (6 மாதங்கள் + 6 மாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பாடப்பிரிவுகளில் தமிழில் பாடம் நடத்தப்பட்டு, வகுப்பறை பயிற்சிகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் நடத்தப்படும்.
இறுதித் தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் (கொள்குறி வினா அடிப்படையில்). இப்பயிற்சியில் கீழ்க்கண்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
முதல் பருவம்
- பாடம் 1: கூட்டுறவு கருத்தியலும் நடைமுறையும்
- பாடம் 2: கூட்டுறவு சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள்
- பாடம் 3: நிதி கணக்கியல்
- பாடம் 4: கூட்டுறவு மேலாண்மை மற்றும் நிருவாகம்
- பாடம் 5: கணினி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு
இரண்டாம் பருவம்
- பாடம் 6: கூட்டுறவு தணிக்கை
- பாடம் 7: கூட்டுறவு வங்கியியல்
- பாடம் 8: நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்
- பாடம் 9: கடன் சார்பற்ற கூட்டுறவுகள்
- பாடம் 10: செய்முறை பயிற்சி / கள ஆய்வு / திட்ட அறிக்கை தயார் செய்தல்
தேர்வு முறை மற்றும் தகுதி விவரங்கள்
இறுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண் பெற வேண்டும்.
- பாடம் 1-9: எழுத்து தேர்வு (30 மதிப்பெண்கள்) + அக மதிப்பீடு (10 மதிப்பெண்கள்) = 40 மதிப்பெண்கள்.
- பாடம் 10: எழுத்து தேர்வு (20 மதிப்பெண்கள்) + அக மதிப்பீடு (10) + களப்பயிற்சி (10) = 40 மதிப்பெண்கள்.
வகுப்பு வாரியான தகுதிகள்:
- 40%-59%: இரண்டாம் வகுப்பு
- 60%-74%: முதல் வகுப்பு
- 75% மேல்: சிறப்பு நிலை
மேலாண்மை நிலைய ஒழுங்குமுறை
- பயிற்சி நிலையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி நிலையத்தின் சட்டம், விதிகள் மற்றும் ஒழுக்கக் கட்டுபாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வருகைப் பதிவு, விடுப்பு எடுத்தல் மற்றும் பயிற்சி நிலைய தேர்வுகள் சம்பந்தமாகப் பயிற்சி நிலைய சட்ட திட்டங்களுக்கு பயிற்சியாளர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
- பயிற்சி நிலையத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கும் பயிற்சியாளர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பயிற்சிக்கான விண்ணப்பம் அனுப்பும் முறை
- விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.in வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்ப காலம்: 08.06.2026 முதல் 20.07.2026 மாலை 5:00 மணி வரை.
- தேவையான சான்றிதழ்கள்: SSLC, +2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்.
- விண்ணப்பத்தில் Digital Signature மற்றும் Passport Size Photo இணைக்கப்பட வேண்டும்.
- கட்டணம் செலுத்தப்படாவிட்டால், Payment Failure Button மூலம் மீண்டும் செலுத்தலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
- S.S.L.C மதிப்பெண் பட்டியல் மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (Marksheet), பட்டப்படிப்பு பெற்றிருப்பின் அதற்கான Certificate
- மாற்று சான்றிதழ் (Transfer Certificate)
- ஜாதி சான்றிதழ் (Community Certificate)
குறிப்பு: இணையத்தளத்தின் வழியாக விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு 08.06.2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி நாள் 20.07.2026 அன்று மாலை 5.00 மணி வரை. அதற்கு பின்னர் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
| விவரம் | தேதி / காலம் |
|---|---|
| விண்ணப்பிக்கும் காலம் | 08.06.2026 முதல் 20.07.2026 மாலை 5.00 மணி வரை |
| சேர்க்கைக்கு தகுதியான பயிற்சியாளர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடும் நாள் | 22.07.2026 |
| பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு சான்றிதழ்கள் சரிபார்த்து சேர்க்கை மேற்கொள்ளும் நாள் | 22.07.2026 முதல் 31.07.2026 வரை |
| பயிற்சி துவங்கும் நாள் | 03.08.2026 |
விண்ணப்பங்கள் மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்டு, தக்க சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் அவை நிராகரிக்கப்படும்.
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும்ம்.
பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் (கொள்குறி வினா அடிப்படையில்).
விண்ணப்பதாரர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான EMIS No.(+2 சான்றிதழில் உள்ளப்படி) அல்லது கல்லூரி பட்டபடிப்பு முடித்திருப்பின் UMIS No. (கல்லூரி சான்றிதழில் உள்ளப்படி) விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
குழுவின் பரிசீலனைக்கு நேரில் வருகை தரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (பத்தாம் வகுப்பு உட்பட) இரு சான்றொப்பமிட்ட (Self Attested) நகல்களையும் (Two copies with attested) (கொண்டு வர வேண்டும்.
09/06/2026
நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு (லேட்ரல் என்ட்ரி) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் ஆன்லைனில் (www.tnlea.com) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
02/06/2026
ISRO-Online Course for School Teachers , SETU-2026: Space Technology and its Applications ,June 08, 2026 to June 12, 2026,Registration Ends Soon..
Greetings from IIRS, ISRO Dehradun !
We are happy to inform you that, IIRS ISRO Dehradun has announced a special online course for School teachers on "SETU: Space Technology and its Applications". The course is scheduled online during June 08, 2026 to June 12, 2026. The course brochure, tentative schedule and registration links are available on following links:
• Course Brochure-
https://www.iirs.gov.in/iirs/
• Course Schedule (tentative)-
https://www.iirs.gov.in/iirs/
• Course Registrations-
https://elearning.iirs.gov.in/
Further details can be accessed at https://jigyasa.iirs.gov.in/
The course is available free of cost to all school teachers. We request you to register for the course and share this information with your friends and colleagues for wider circulation. We have limited seats for this course and registrations are open on first-come-first-serve basis.
THANK YOU
ISRO
🙏
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு. கடைசி நாள் : 15-6-2026
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசால் தோற்றுவிக்கப் பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது 2026- 27 கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன.
இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வகுப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இரு பாலருக்கான தனித்தனி கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.
மாற்றுச்சான்றிதழ்: நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப் பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.),உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113 ( தொலைபேசி 044 - 2254 2992) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்புக்கு ஜூன் 15ம் தேதிக்குள்ளும், முதுகலை தமிழ் பட்டப் படிப்புக்கு ஜூன் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல் பெற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
01/06/2026
NEET கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெற ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது, வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 27-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வரும் ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் 13 லட்சம் பேர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பித்து உள்ளனர். இதுவரை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in இணையம் மூலம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
23/05/2026
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம், கடைசி நாள் : 17-6-2026 ,5 PM.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடைமருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 15 சதவீதம் ஒதுக்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 60 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், பி.வி.எஸ்சி- ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2026- 27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு
என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

.jpeg)


~2.jpeg)