21/06/2026

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்.

 தி.மு.க., அரசால் தொடங்கப்பட்ட, 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர், 'திறன் தமிழ்நாடு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில், 2022ல், 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பது. தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.தற்போது அமைந்துள்ள புது அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் உள்ள பெயரை, 'திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்' என, மாற்றியுள்ளது. அதோடு, மே 15ம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment