Search This Blog

22/06/2022

தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்பு-.எங்க படிக்கலாம்?

 தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்படுகின்றன.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன. விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த திங்கள்கிழமை (ஜூன்20) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/- (SC/ST ரூ.100/-) வங்கி வரைவோலையை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் விரைவு அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம்.

மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 4-ம் தேதி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர், 9884159410 என்ற செல்பேசி எண்ணுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்), அம்பத்தூர், சென்னை 600098 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-29567885/29567886 என்ற தொலைபேசி எண்கள், tilschennai@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.


21/06/2022

10,12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல், மறுக்கூட்டல், விடைதாள் நகல் பெற செய்ய வேண்டியது.

 10,12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல், மறுக்கூட்டல், விடைதாள் நகல் பெற செய்ய வேண்டியது. 


















Govt Arts and Science collge- ல் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்:7/7/2022

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவி,,,,,,யல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai - 6' என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும்.

Apply online

👇


www.tngasa.in


www.tngasa.org

20/06/2022

10 & 12 வகுப்புக்கு துணைத்தேர்வு அறிவிப்பு.

 


தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார்.


12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் 97.95% மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வரச்சொல்லி நிறைய தன்னம்பிக்கை கொடுத்தோம். ஆனாலும் சில லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். L

B.E/B.Techஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்டது. கடைசிநாள். ஜுலை 19.

12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப்  https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்க உள்ளது. மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.


இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.கலந்தாய்வு விபரம்மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

Apply online👉https://www.tneaonline.org/


எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வுக்கு நுழைவு சீட்டு வெளியீடு.

 



காவல் துறைக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, 444 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கு, வரும் 25ம் தேதி மாநிலம் முழுதும், 197 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. காலை, 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொது தேர்வும்; மதியம் 3:30 முதல் மாலை 5:10 மணி வரை, தமிழ் திறனறிதல் தேர்வும் நடக்க உள்ளது. போலீஸ் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தோருக்கு, ஜூன் 26ம் தேதி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான நுழைவு சீட்டு, சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here 

👇

https://www.tnusrb.tn.gov.in/







16/06/2022

20 ஆம் தேதி 10,12 வகுப்பு Result

 



10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுதினர். 10ஆம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 55ஆயிரத்து 474 மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து, அவற்றை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.6.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
காலை 9.30 மணிக்கு (12ஆம் வகுப்பு)

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
நண்பகல் 12.00 மணிக்கு (10ஆம் வகுப்பு)

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centers) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 



15/06/2022

திட்டமிட்டபடி 17ஆம் தேதி 10th ரிசல்ட்

 சென்னை: 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.inwww.tnresults.nic.in-ல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதித்தது. தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியும் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. 

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


12/06/2022

பழைய பஸ் பாஸ் செல்லும் அமைச்சர் அறிவிப்பு.

 சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் தெரிவித்ததாவது: "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். பள்ளி வாகனங்களுக்கு முன்னும் பின்னும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக இது கண்காணிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

11/06/2022

IIM நுழைவு தேர்வு விண்ணப்பிக்க 15/6/2022 வரை கால அவகாசம் நீட்டிப்பு

 சென்னை:'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. - பி.ஜி.பி. உட்பட ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் 'ஜிப்மேட்' என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. வரும் 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான 'ஜிப்மேட்' நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு 9ம் தேதியுடன் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று கால அவகாசம் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் jipmat.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் தகவல்களைwww.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011- - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணிலும் விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது

IBPS RRB Recruitment 2022 for 8106 Clerk/PO Posts @ibps.in: Last date-27-6-2022



 IBPS RRB Recruitment 2022 for 8106 Clerk/PO Posts @ibps.in: Last date-27-6-2022

IBPS RRB 2022 Recruitment Notification: Institute of Banking Personnel Selection (IBPS) has notified a huge number of vacancies for recruitment of as Office Assistant, Officer Scale-I (Assistant Manager) and Officer Scale 2 (Manager) and Office Scale 3 (Senior Manager) under Regional Rural Banks of India (RRB).

A total of 8106 vacancies are available for Group “A”-Officers (Scale-I, II & III) and Group “B”-Office Assistant (Multipurpose) Posts. Any eligible candidate, who aspires to join any of the 43 Regional Rural Banks listed at (A) is required to register for the Common Recruitment Process (CRP for RRBs- XI).

IBPS RRB Prelims exam for IBPS RRB PO 2022 and IBPS RRB Clerk 2022 is scheduled to be held from 07 August to 21 August 2022. The dates are tentative and can be changed.

IBPS Exam for Officer Scale 2 and 3 will be held on 24 September 2022 which is a single exam under the selection process. However, the main exam will be held for the post of PO and Clerk for those who would clear the IBPS RRB Prelims Exam 2022.

Last Date:27/6/2022.

For More Details contact👉https://ibps.in/






Madras School of Economics Admission 2022 – Registration Begins for B.A , M.A Programmes. Last dates :13/6/2022



 Madras School of Economics Admission 2022 – Registration Begins for B.A , M.A Programmes. Madras School of Economics (MSE) invites applications for admission to 2-Year (4 Semesters) M.A. Programs in (i) General Economics, (ii) Applied Quantitative Finance, (iii) Financial Economics (iv), Actuarial Economics and (v) Environmental Economics. Candidates can fill the application form online at www.mse.ac.in.


10/06/2022

AIR FORCE COMMON ADMISSION TEST (AFCAT- 02/2022).Last Date:30/6/2022


Indian Air Force invites Indian citizens (Men and Women) to be part of this elite force as Group A Gazetted Officers in Flying and Ground Duty (Technical and Non-Technical) branches. 

Online AFCAT examination will be conducted on 26 Aug 22, 27 Aug 22 and 28 Aug 22.

How to Apply. Aspirants for IAF are required to apply online Using the link https://afcat.cdac.in. Aadhaar Card is mandatory for online. 

For more info.👉Click Here

Or

 Click👉 https://afcat.cdac.in

🙏



RECRUITMENT OF JUNIOR EXECUTIVES IN AIR TRAFFIC CONTROL-Last date:14/7/2022

  •  

RECRUITMENT OF JUNIOR EXECUTIVES IN AIR TRAFFIC CONTROL-Last date:14/7/2022

Educational qualification:

Full Time Regular Bachelors' 

Degree of three years in 

Science (B.Sc) with Physics 

and Mathematics. 

OR

Full Time Regular Bachelor's 

Degree in Engineering in any 

discipline. (Physics & 

Mathematics should be 

subjects in any one of the 

semesters curriculum). 

Age limit: Maximum age limit is 27 years as on 14.07.2022.

IMPORTANT DATES:

Opening date for On-line Application 15.06.2022

Last date for On-line Application 14.07.2022

Tentative Date of On-line Examination Will be announced on AAI Website

www.aai.aero


👉Advertisement



08/06/2022

IIT MADRAS வழங்கும் Out Of The Box Thinking பயிற்சி. கடைசி நாள் 24-6-2022 . Extended Last date: 10/7/2022




ம்மில் பலருக்கு கணிதம் என்றாலே ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதை போக்கும் விதமாக புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தவும், அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் பரந்து சிந்தித்து அணுக ( அவுட் ஆப் பாக்ஸ் ) உதவும் வகையிலும் இணையதள வழியாக புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்த பயிற்சித் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூன் 6 -ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1-ம் தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சி முடிந்து தேர்வின்போது மட்டும் ஒரு சிறு தொகை சான்றிதழுக்காக வசூலிக்கப்படும். இறுதித் தேர்வு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடத்தப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


இது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் "இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இதன் பயன்கள் பின்வரும் காலங்களில் நிச்சயம் தெரியவரும். ஒரு பிரச்னையை அறிவியல் பூர்வமாக அணுகி அதற்குத் தீர்வு காண வைப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம்.. 

இந்தப் பாடத்திட்டத்தில் அதை கணிதம் வாயிலாகச் சொல்லித் தரவிருக்கிறோம் என்றார்.

மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரியபட்டா கணித அறிவியல் நிறுவனரும் இயக்குநருமான பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றி வருபவர் இவர். இது குறித்து அவர் கூறுகையில் " கணிதத்தை வெறும் பாடமாக இல்லாமல், ஆர்வத்துடன் அணுகினால் நிச்சயம் அது மேஜிக் அல்ல லாஜிக்தான் என்பது தெரியவரும். நம் அறிவும் அதற்கேற்றாற்போல் மேம்படும். இன்று டெக்னாலஜிக்கு ஏற்றார்போல் நம் திறனை வளர்த்துக்கொள்ளவதற்குக் கணிதம் அவசியமாகிறது. அதை இப்பாடத்தில் சேர்த்துள்ளார்கள்" என்றார்.


Registrations Close on 10th July 2022 , Sunday.
Course starts on 13th - July 2022, Wednesday

🙏











பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்__அமைச்சர் பொன்முடி .

பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. 

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



பொறியியல் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு 20-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினம் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி இறுதி நாள். 22-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.

ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

 ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

🙏






04/06/2022

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - TRB

🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    




சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ 

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

6.33 லட்சம் பேர் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிகாரி தகவல்

 இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முயற்சி திருவினை ஆக்கும்

💢💢💢💢💢💢💢💢💢

🙏