TAMIL NADU
PHYSICAL EDUCATION
AND
SPORTS UNIVERSITY
Regular Admission Open.
Last date:10-7-2022
For More Details
👇
TAMIL NADU
PHYSICAL EDUCATION
AND
SPORTS UNIVERSITY
Regular Admission Open.
Last date:10-7-2022
For More Details
👇
COMMON RECRUITMENT FOR THE POSTS OF GR.II POLICE CONSTABLE, GR.II JAIL WARDER AND FIREMEN-3552
2022-ம் வருட இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் விண்ணப்ப செயல்முறை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பம் தொடங்கும். இணைய வழியில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 3552
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:
பிரிவு | உச்ச வயது வரம்பு |
---|---|
பொதுப் பிரிவு | 26 வயது |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் | 28 வயது |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் | 31 வயது |
திருநங்கைகள் | 31 வயது |
ஆதரவற்ற விதவைகள் | 37 வயது |
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் | 47 வயது |
2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ 250/-
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
More Details👉https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
சென்னை : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார் எல்லாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை கடந்து விட்ட நிலையில், பணம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற இன்னும் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது. இதனால், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனை எதிர்கொள்ள முடியாமல், அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களும் மலுப்பலான பதிலை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஜுலை மாதம் முதல் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்த நிலையில், ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :- மாணவிகள் 6 முதல் 12 வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உயர்கல்வி பயில வேண்டும். தனியார் பள்ளியில் RTE-ன் கீழ் 6 முதல் 8 வரை பயின்ற பின் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தாலும் திட்டத்தில் பயன்பெறலாம்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-23ல் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன்பெற முடியாது. இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவம் பயிலும் அனைத்து மாணவிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏
Central University PG-CUET:EXTEND TO JULY 4,2022
பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜூன் 18 முதல், ஜுலை 4 வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,Pondicherry Central University,ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மே-19 முதல் தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 (நேற்று) என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:இளங்கலை-காட்சிக்கலை எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் , தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2022-23ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்).
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடைலாம்.
இதற்கான விண்ணப்பங்களை 24ம் தேதி முதல் ஜூலை 22 வரை தபால் மூலமாக பெற்றோ அல்லது www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு ஜூலை 27 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்
இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் இன்று மாலை 6 மணி முதல் 27ம் தேதி மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 28ம் தேதி மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
Direct Recruitment for the post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering / Non-Engineering) Tamil Nadu Educational Service for the year 2017-2018.
List of Candidates Called for Certificate Verification
https://forms.gle/jHNCd19uc3mcLw6p9
within 3 days from the date of release of the aforesaid list. No other mode of grievance/representation will be accepted.
👉Click here listof candidate shortlisted for CV.
சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு அறிய
கிளிக்
பண்ணுங்க
👇
🙏
மத்திய பல்கலைகழகங்களில் UG பயில நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க
இன்றே கடைசி நாள்
Apply online
👇
பெற்றோர், மாணவர்களுக்காக
தமிழக அரசு வெளியீடு.
Please Visit : https://naanmudhalvan.tnschools.gov.in
🙏
தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்படுகின்றன.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன. விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடந்த திங்கள்கிழமை (ஜூன்20) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/- (SC/ST ரூ.100/-) வங்கி வரைவோலையை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் விரைவு அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம்.
மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 4-ம் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர், 9884159410 என்ற செல்பேசி எண்ணுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்), அம்பத்தூர், சென்னை 600098 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-29567885/29567886 என்ற தொலைபேசி எண்கள், tilschennai@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவி,,,,,,யல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai - 6' என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும்.
Apply online
👇
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் 97.95% மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வரச்சொல்லி நிறைய தன்னம்பிக்கை கொடுத்தோம். ஆனாலும் சில லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். L
12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்க உள்ளது. மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.
இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.கலந்தாய்வு விபரம்மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
Apply online👉https://www.tneaonline.org/
காவல் துறைக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, 444 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கு, வரும் 25ம் தேதி மாநிலம் முழுதும், 197 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. காலை, 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொது தேர்வும்; மதியம் 3:30 முதல் மாலை 5:10 மணி வரை, தமிழ் திறனறிதல் தேர்வும் நடக்க உள்ளது. போலீஸ் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தோருக்கு, ஜூன் 26ம் தேதி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான நுழைவு சீட்டு, சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click Here
👇