Search This Blog

11/09/2021

பாரதி(யார்)

bharathiyar history in tamil

பிறப்பு 

பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று தமிழ் நாட்டின் திருநெல்வேலி சீமையில் உள்ள  எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். (அவர் வாழ்ந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டமும் திருநெல்வேலி சீமை என்ற பெயரோடுதான் அழைக்கப்பட்டது) இவரது தந்தையின் பெயர் சின்னசாமி ஐயர் மற்றும் இவரது தாயாரின் பெயர் இலக்குமி அம்மையார்.

இயற்பெயர் 

பாரதியாரின் பெற்றோர் அவருக்கு சுப்பிரமணியம் என்ற பெயரை சூட்டினார்கள். இளம் வயதில் சுப்பிரமணியம் அனைவராலும் செல்லமாக சுப்பையா என்ற பெயரோடு தான் அழைக்கப்பட்டார்.

பாரதியார் பெயர் காரணம்

சுப்பிரமணியம் வருங்காலத்தில் மிகப்பெரிய கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். அதற்காக சுப்பிரமணியத்தை ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். ஆனால் சுப்பிரமணியத்துக்கு தமிழில் கவிதைகள் எழுதுவதில் தான் அதிகம் நாட்டம் இருந்தது. தனது 11ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை அவர் தொடங்கிவிட்டார். சுப்பிரமணியத்தின் கவிதை எழுதும் திறமையைக் கண்டு வியந்த  எட்டயபுரத்தின் மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை சுப்பிரமணியத்திற்கு வழங்கினார். பாரதி என்று சொல்லிற்கு சரசுவதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டபவர் என்று பொருள். அன்றிலிருந்துதான் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்ரமணிய பாரதியாக மாறினார்.

குடும்ப வாழ்க்கை

Bharathiyar family photos

1897ஆம் ஆண்டு பாரதியாருக்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அவர் வெறும் 14 வயது நிரம்பிய சிறுவனாகவே இருந்தார். பாரதியாரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் இருந்தார்கள். தங்கம்மாள் 1904 ஆம் ஆண்டிலும், சகுந்தலா 1908 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

பாரதியார் படைப்புகள்

பாரதியார் ஏராளமான கவிதைப் படைப்புகளை இயற்றியுள்ளார். குயில், பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, தமிழ் மொழி வாழ்த்து, கண்ணன் பாட்டு, ஞானரதம், விநாயகர் நான்மணிமாலை, முரசு உள்ளிட்டவை அவரது படைப்புகளில் சில குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

 

பாரதியார் அறிந்த மொழிகள்

பாரதியின் பதினாறாவது வயதில் அவரது தந்தை சின்னசாமி ஐயர் மரணம் அடைந்து விட்டார். தந்தையின் மறைவுக்கு பின்னர் பாரதியாரின் வாழ்க்கையை வறுமை புரட்டிப் போட்டது. பின்னர் பாரதியார் காசியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சில காலம் தங்கினார். அங்கே இருக்கும்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்று அம்மொழிகளில் புலமை பெற்றவரானார். இவை மட்டுமின்றி ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாரதியார் புலமைப் பெற்றவராக திகழ்ந்தார்.

பல மொழிகளை அறிந்து புலமை பெற்ற பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"   என்று பாடியதன் மூலம் தமிழுக்கு நிகரான மொழி வேறு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார்.

பாரதியாரின் பணிகள்

எட்டயபுர சமஸ்தான பணி

சில காலம் கழித்து எட்டயபுரம் சமஸ்தான மன்னரிடமிருந்து பாரதியாருக்கு காசியிலிருந்து திரும்பி வருமாறு அழைப்பு வந்தது.  அந்த அழைப்பை ஏற்று பாரதியார் எட்டயபுரத்திற்கு திரும்பினார்.  எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணிபுரிகின்ற வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.  சில காலம் சமஸ்தானத்தில் பணியாற்றிய பாரதியார் திடீரென்று அந்த பணியிலிருந்து விலகி விட்டார். 

தமிழ் ஆசிரியர்

பிறகு சில காலம் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பாரதியார் பணியாற்றினார்.  ஆசிரியர் பணியிலும் தொடர்ந்து நீடிக்க பாரதிக்கு ஆர்வமில்லை. 

சுதேசமித்திரன் துணை ஆசிரியர்

சுப்பிரமணிய ஐயர் என்பவர் சுதேசமித்திரன் என்ற பெயரில் பத்திரிக்கையை சென்னையில் நடத்தி வந்தார். சுப்பிரமணிய ஜயருக்கு பாரதியாரின் அதீத எழுத்து திறமையை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்திருந்தது. எனவே சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பொறுப்பை பாரதியாருக்கு கொடுக்க நினைத்தார். பாரதியாரும் அப்பணியை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். பத்திரிக்கையில் பணியாற்றுவது பாரதியாரின் மனதிற்குப் பிடித்த ஒரு தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் சுதேசமித்திரன் பத்திரிக்கை மூலம்  வந்த வருமானம் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சதேசமித்திரன் பத்திரிக்கையில் இருந்து விலகினார் பாரதியார்.

இந்தியா பத்திரிக்கை 

பிறகு தாமே சொந்தமாக  ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அந்த பத்திரிக்கைக்கு பாரதியார் இட்ட பெயர் இந்தியா. இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து  ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல  கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இதனால் ஆங்கிலேய அரசிடம் இருந்து பல அச்சுறுத்தல்கள்  பாரதியாருக்கு வந்தன.

பாரதியாரின் சிறப்புப் பெயர்கள்

மகாகவி, தேசிய கவிஞர், காளிதாசன் புதுக்கவிதையின் முன்னோடி, மக்கள் கவிஞர், வரகவி, தமிழ் கவி, விடுதலைக்கவி உள்ளிட்ட பல சிறப்புப் பெயர்களால் இன்றைக்கும் பாரதியார் போற்றி புகழப்படுகிறார்.

🙏

 

09/09/2021

TNTRB-Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I , Last Date: 17.10.2021

  TAMILNADU 

Applications are invited only through online mode from eligible
candidates up to 05.00 P.M on 17.10.2021 for the Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I
/Computer Instructor Grade I in School Education and other Departments for the year 2020-2021.





For more info. Contact👉http://trb.tn.nic.in/

Tamilnadu Veterinary Animal Sciences University Admission Open,Last Date:8/10/2021



Tamilnadu Veterinary Animal Sciences University Admissions Open. Last Date:8/10/2021,


🙏



07/09/2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி

 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் கூடுதல் சேர்க்கைக்கு  அனுமதி


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்கை உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.


கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைபாட பிரிவுகளில் 25 சதவிகித கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாட பிரிவுகளில் கல்லூரிகளில் உள்ள ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகித கூடுதல் இடங்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் மனுமதி வழங்க வேண்டும் என உயர்கல்வித்துறை கூறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு கல்லூரி காலை நோக்கி மாணவர்கள் இந்த ஆண்டு படையெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் செயல்படும் 145 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவிகிதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமத்து அளித்து உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள 145 அரசு கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதி ஏற்படும். இந்த கூடுதல் மாணவர் சேர்க்கையானது ஏற்கனவே தமிழக அரசு பின்பற்றக்கூடிய 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை பின்பற்றவே வேண்டும் என உயர்கல்வித்த்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணையாக வெளியிட்டுள்ளார்.

🔰🔰🔰🔰🔰🔰🔰





06/09/2021

TN AGRI. UNIVERSITY STARTS ON SEPT. 8


🌿🌾🌽🌼🍄🍅🍆🍈🍈🍉🍊🍋🍌🍍

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளன.

🌳🌴🌴🌵🌷🌸🌹🍃







04/09/2021

Happy Teachers Day

 🌸🌸🌸🌺🌺🌺🌻🌻🌻


🌻🌻🌻🌺🌺🌼🌸🌸


           இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு.

ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரை பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம் வரலாறு :

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் சிறப்புகள் :

ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை.

மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர் .

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.

மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.

ஆசிரியர் தின கொண்டாட்டம் :

ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. 

ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக அரசின் “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது.

இப்படி மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களைப் போற்றி, நன்றி கூறவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

💢💢💢💢💢💢💢




டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு :

பிறப்பு:

வீ.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888-ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு.

கல்வி :

இவர் தன் இளமைக் காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியை, உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார்.

தனது தொடக்க கல்வியை திருவள்ளூரில்  உள்ள ‘கௌடி’ பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பதியிலுள்ள, ‘லூத்தரன் மிஷன்’ உயர்நிலை பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை வேலூரில் உள்ள ‘ஊரிஸ்’ கல்லூரியிலும் பயின்றார்.

பின் அங்கிருந்து சென்னையிலுள்ள கிறிஸ்துவர கல்லூரிக்கு மாறி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். முதன்மைப் பாடமாக தத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.

குடும்ப வாழ்க்கை:

டாக்டர் ராதா கிருஷ்ணன் தனது 16-வது வயதில் தனது தூரத்து உறவினர் மகளான சிவகாமி என்னும் பெண்ணை மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இவரது ஒரே மகன் சர்வபள்ளி கோபால். இவர் இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவராக உள்ளார்.

இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா மற்றும் சங்கரா ராமானுஜர்,மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும், சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி போன்றோர்களின் தத்துவங்களையும் கற்று தேர்ந்தார்.

மேலும் இவற்றையெல்லாம் நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தினார். இவற்றையெல்லாம் நம் நாட்டில் இருந்தே கற்றார் என்ற பெருமையும் இவரையே சாரும்.

பணிகள் மற்றும் பதவிகள்:

1962 முதல் 1967 வரை இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

🙏

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰



24/08/2021

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்று 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்_பள்ளிக்கல்வித்துறை



 பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ப ள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.




TET சான்றிதழ் ஆயுள்சான்றிதளாக அறிவிப்பு

 


ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசாணை எண் 128, பள்ளிக் கல்வித்துறை, 23.08.2021 மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதற்காகத் தனியாகச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


அரசாணை👉Click Here



கல்லூரி மாணவர்களுக்கு CORONA தடுப்பூசி கட்டாயம்..!


செப்.1 -ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம். தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது

21/08/2021

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு முதல்வர் அறிவிப்பு.

 


தற்போது தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும்‌ நிலையில்‌, மாநிலத்தில்‌ மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப்‌ பரவலின்‌ தன்மை, அண்டை மாநிலங்களில்‌ நோய்த்தொற்றின்‌ தாக்கம்‌, ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின்‌ செயலாக்கம்‌ குறித்து இன்று (21.08.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்வர்‌ ஸ்டாலின் தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ உயர் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செப்.1 முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மதிய உணவுத்‌ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

அதன்படி, ''செப்டம்பர் 1 முதல்‌ பள்ளிகளில்‌ 9, 10, 11, 12ஆம்‌ வகுப்புகள்‌ சுழற்சி முறையில்‌, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, செயல்படும்‌. இப்பள்ளிகளில்‌ மதிய உணவுத்‌ திட்டமும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேற்படி உயர்‌ வகுப்புகள்‌ செயல்படுவதைக் கவனித்து அதன்‌ அடிப்படையில்‌ மழலையர்‌ வகுப்புகள்‌, 1 முதல்‌ 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 5-க்குப்‌ பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.

💢💢💢💢💢💢💢


PART TIME B.E./B.TECH ADMISSIONS 2021-2022 /Last Date : 05-Sep-2021

PART TIME B.E./B.TECH. ADMISSIONS 2021-2022

Directorate of Technical Education.Chennai - 600025.


Important Dates:

Issue of Notification : 06-Aug-2021

Activation of Online Application form 10:00 am onwards 
 06-Aug-2021

Last date of Submission of Application form through Online 
 05-Sep-2021

Status of Application 10:00 am onwards
 13-Sep-2021

Days to Clarify Applicants' doubts only through Online
(Video Conferencing) Between 9:30 am and 5:30 pm
 18-Sep-2021 to 19-Sep-2021

Announcement for Ranking : 
10:00 am onwards22-Sep-2021

Counselling Fee Payment for all eligible applicants 
22-Sep-2021 to 25-Sep-2021
💢💢💢💢💢💢💢💢💢💢💢

MORE DEATAILS CONTACT:

The Secretary,
Part Time B.E./B.Tech. Admissions 2021-2022,
Coimbatore Institute of Technology,
Civil Aerodrome (PO), Coimbatore - 641 014.

secretaryptbe@cit.edu.in
ptbe.tnea@gmail.com

94869 77757

+91- 422 - 2574071
+91- 422 - 2574072
Extn : 480
FAX: +91 - 422 - 2575020

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

APPLY ONLINE: 👉http://www.ptbe-tnea.com


20/08/2021

ஆக.23 முதல் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

    


தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய

கிளிக் பண்ணுங்க👇

                         👉Click Here👈


16/08/2021

TN B.E/B.Tech சேர்க்கை விண்ணப்பிக்க கடைசிநாள் 24/8/2021

 தழிழ்நாடு B.E/B.Tech சேர்க்கை விண்ணப்பிக்க கடைசிநாள் 24/8/2021



 




Apply online 👇


14/08/2021

WISH U HAPPY 78th INDEPENDENCE DAY.




இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள

This year, Independence Day falls on a Thursday, with celebrations echoing the spirit of 'Viksit Bharat.' The theme reflects the vision of a progressive, inclusive, and empowered India by becoming a developed nation by 2047 – 100 years after independence.



👇
 நமது தேசம் பற்றி அறிய 
ஒரு வினாடி வினா



🔰🔰🔰




💢 💢 💢 💢

பாடல்கள்

 (You Tube -லிங்க்)  
    
🌟🌟🌟🌟

 👇

🙏







11/08/2021

NET தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என UGC-NTA அறிவிப்பு.

 


நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் NET தேர்வுக்கு செப்-5 வரை https://ugcnet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 டிசம்பர் ,2021 ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருந்த NET தேர்வுகள் ஒரே கட்டமாக அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: முதுகலை பட்டம் 

  உதவித்தொகை பெறுவதற்கும், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கும் NET தேர்வு நடத்தப்படுகிறது.

 விண்ணப்பிக்க கடைசிநாள்-5/9/3021

விண்ணப்பிக்க 👇 

https://ugcnet.nta.nic.in


🙏







06/08/2021

10 மற்றும் 11 வகுப்பு துணைத்தேர்வு செப்-2021 தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 11/8/2021

 10 மற்றும் 11 வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர்-2021 தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 11/8/2021





..................................................................


SEPT.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்

SEPT.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்.

.............  

தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் online வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.   மேலும், பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.மேலும், கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

🙏

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

04/08/2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசு

 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (4-8-2021) தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏

💢💢💢💢💢💢💢