Search This Blog

Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

23/09/2022

TNTET-Paper-I தேர்வு 14.10.2022 தேதி முதல் 20.10.2022 வரை









 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் படி 10.09.2022 முதல் 15,09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ற்கான தேர்வு 03.09.2022 பத்திரிகைச் செய்தியின் படி நிருவாக காரணங்களினால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது தேர்வுகள் 14.10.2022 தேதி முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட உள்ளது.

🔰🔰🔰🔰🔰



🙏



03/09/2022

TNTET-I. தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.


 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட இருப்பதாக கடந்த மாதம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவித்தது.


பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.


தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.




09/08/2022

TN TET-I தேர்வு தேதி மாற்றம்.

 


ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதி முதல்தாள் தேர்வு தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு 15ஆம் தேதி வரை நடக்கும் என்றும் கணினி வழியில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

24/08/2021

TET சான்றிதழ் ஆயுள்சான்றிதளாக அறிவிப்பு

 


ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசாணை எண் 128, பள்ளிக் கல்வித்துறை, 23.08.2021 மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதற்காகத் தனியாகச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


அரசாணை👉Click Here