Search This Blog

03/09/2022

TNTET-I. தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.


 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட இருப்பதாக கடந்த மாதம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவித்தது.


பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.


தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment