Search This Blog

16/09/2022

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

மிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கத்தை விட இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை கட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிலையில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக (செப்டம்பர் 16ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த செயல்பாடுகள் வருகின்ற 21ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் www.tngasapg.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


No comments:

Post a Comment