Search This Blog

24/08/2021

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்று 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்_பள்ளிக்கல்வித்துறை



 பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ப ள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment