Search This Blog

08/06/2024

பி. இ,பி. டெக் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 7/7/2024


 

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்கள் 'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த இடங்களில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்கள், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பிஎஸ்சி பட்டதாரிகள் சேரலாம். அந்த வகையில், இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 8-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, ஜூலை 7-ம் தேதி முடிவடைகிறது.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்

👇


www.tnlea.com 




 🖕

என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.300. இக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைனில் செலுத்தலாம்.

எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 04565-224528, 04565-230801 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம், என்று மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔰🔰🔰🔰🔰


✳️✳️✳️


🙏









06/06/2024

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் ஓராண்டு பயிற்சிக்கு அழைப்பு.கடைசி நாள் 20/6/2024

 





வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி பெற விரும்பினால், அதற்கான உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.


வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், உள்நாட்டில் ஓராண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், அங்கீகார சான்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தடையில்லா சான்று உள்ளிட்ட சான்றுகளுடன், மருத்துவ கல்வி இயக்கத்தில் வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக நாட்களில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் சமர்பிக்கலாம் என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


மேலும் விவரங்களுக்கு


  https://www.tnhealth.tn.gov.in/


என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது


🩺🩺🩺

🔰🔰

🙏



TN - SET -2024 POSTPONED.

 




It is informed that the State Level Eligibility Test (SET) examination Scheduled on 07th and 08th June 2024 is postponed due to technical reasons. The revised date will be intimated later.

🔰🔰🔰🔰🔰

05/06/2024

+1 மாணவர்களுக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜூலை 21 தேதி நடைபெற உள்ளது.

🔰🔰🔰🔰🔰🔰

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: ஜூலை 21-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது


இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.


அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின் 9, 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும்,முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.


இந்த தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். தேர்வெழுத விருப்பமுள்ளவர்கள்

 www.dge.tn.gov.in 

என்ற இணையதளத்தில் ஜூன்11-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


🔰🔰🔰🔰🔰🔰


🙏







NEET UG Result 2024 Out:

 NEET UG Result 2024 Link: The National Testing Agency (NTA) today released the National Eligibility cum Entrance Test Undergraduate 2024 result. Candidates who appeared in the examination can check their respective results through the official website — exams.nta.ac.in.


NEET UG Result 2024 Live Updates: NEET UG results soon at exams.nta.ac.in



03/06/2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,இளநிலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்:21/6/2024

2024-25ஆம் கல்வியாண்டிற்கான கீழ்கண்ட இளநிலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கு   03.06.2024 முதல் 21.06.2024 வரை Online applications வரவேற்கப்படுகின்றன.

🐈🐎🐏🐐🐒

🐖🐔🐓🐒

🐕🐁🐀

🐘


🔰🔰🔰🔰🔰🔰🔰



✳️✳️✳️✳️✳️


Online Application 

And 

More info.

👇

Click Here


🙏


🐂🐃🐄🐅🐆🐇


02/06/2024

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY, Admission Starts on 3/6/2024, Ends on 21/6/2024

 




கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 3-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.


திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகிய இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.


இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி, காலை 10 மணி முதல் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



31/05/2024

ஜுன் 10,2024 பள்ளிகள் திறப்பு.



 தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஜூன்-9 ந்தேதி வரையில் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்துவகைப் பள்ளிகளும் 10.06.2024 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இயக்குநர்

பள்ளிக்கல்வி


27/05/2024

TNPSC Group IV Hallticket Released Download Now.




 TNPSC 

Group IV 

Hallticket

 Released 

Download 

Now 

With Application No.

 and

 DOB

👇

Log in


Hall ticket


🖕


🙏

26/05/2024

NEET UG Result 2024 on 14th June 2024.

🔰🔰🔰

The National Testing Agency (NTA) is set to release the NEET UG Result 2024 on 14th June 2024. The NEET UG exam, held on 5th May 2024, saw numerous candidates participating and eagerly awaiting their results. 

Candidates can check the department’s official website to stay updated with the information regarding NEET UG 2024 result.

💉💉💉💉💉💉💉💉💉💉

How to Check NEET UG Result 2024

To check your NEET UG 2024 Result online, candidates need to follow these steps, which are necessary and mentioned below

  • Visit the official website, https://neet.nta.nic.in/, of the NTA.
  • Go to the notification sections and look around the page until you find the “public notice.”
  • Find the “NEET UG Result 2024” link and click on it.
  • Write down the details that are required, and make sure you enter the correct information.
  • Then click on the “Proceed” tab to send in their information.
  • Now, on the screen, you can check your NEET UG Score 2024.
  • You can check the marks you obtained and cut-off marks to know whether you qualify for the exam or not.


Result 
👇


🖕

🩺🩺🩺🩺🩺

🙏










NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II), 2024. Last Date. 4-6-2024

 


NATIONAL DEFENCE ACADEMY

 &

 NAVAL ACADEMY EXAMINATION (II)

 2024

(Commission’s Website http://upsc.gov.in)

Last Date: 4-6-2024






🔰🔰🔰

✳️✳️✳️

✅✅✅

✔️✔️✔️

🔰🔰🔰

🔰🔰

Apply 
Online 
👇


🖕


🙏




UPSC-CDS(II) -2024, Last Date:4-6-2024

 





COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024

[INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE]


Last Date:4-6-2024



🔰🔰🔰🔰🔰




✅✅✅✅✅


✳️✳️✳️✳️✳️


🔰🔰🔰

Apply

 Online

👇

🙏


25/05/2024

Dr. M.G.R FILM & TELEVISION Institute Admission, Last Date: 10/6/2024


💢 💢 💢


 தமிழ்நாடு அரசு 

எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் 

 விண்ணப்பம் 

மற்றும் 

விவரக்குறிப்பு - 2024-2025 


👇

Click Here

👆

கடைசி தேதி : 10 ஜூன் 2024



🙏

அரசு கவின் கலை,கட்டடக்கலை மற்றும் சிற்பங்கலை கல்லூரி,மாணவர் சேர்க்கை_கடைசி நாள்- : 28-6-2024

     


  தமிழ்நாடு அரசுலைபண்பாட்டுத் துறை


அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம்

மற்றும்

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம்

(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு.) 

மாணவர் சேர்க்கை அறிவிப்பு.



கடைசி நாள்: 30-6-2024


💢💢💢💢💢




     கடைசி நாள் :28-6-2024

✅✅✅✅✅



கடைசி நாள்:30-6-2024

✅✅✅✅✅




 விண்ணப்பிக்க
👇


🙏












24/05/2024

Kalashetra-Rukmini Devi College of Fine Arts, Admission. Last Date:31-5-2024.


Admission Open




Apply Now
👇

🙏

 

தொழிலாளர் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்: 30/5/2024 வரை நீட்டிப்பு




மிழக அரசு கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர் மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பிஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ (பிஜிடிஎல்ஏ), படிப்பும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பும் (டிஎல்எல்) வழங்கப்படுகின்றன.

முதுகலை டிப்ளமோ படிப்பு மாலை நேர படிப்பாகும். டிப்ளமோ படிப்பு வார இறுதி படிப்பாக நடத்தப்படுகிறது. 2024-2025-ம் கல்வி ஆண்டில் பிஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.100. விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தபால் வழியாக பெற, விண்ணப்ப கட்டணத்துக்கான டிமான்ட் டிராப்டை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ கோரிக்கை கடிதத்துடன் பதிவு தபால், விரைவு அஞ்சல் அல்லது கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்கள் அறிய தொழிலாளர் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளரான இணை பேராசிரியர் ஆர்.ரமேஷ்குமாரை 98841-59410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🙏


பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 2024 ஜூன் 21,5மணி

 



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 23/5/2014 நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கள் நியூட்ரிசீயன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. 


இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நேற்று (23-ம் தேதி) தொடங்கியது. அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.

விண்ணப்பிக்க

👇

www.tnhealth.tn.gov.in


&

www.tnmedicalselection.org


🔬🩺💉🩸🧬💊

🏥👩‍⚕️

🎓


🙏





22/05/2024

TNDALU-2024, Law college admission. Last Date : 31/5/2024.




தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 10 முதல் 31-ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




  • NOTE: SEPARATE APPLICATION NEED TO BE FILLED BY THE CANDIDATE OPTING FOR LAW DEGREE COURSES IN SCHOOL OF EXCELLENCE IN LAW AND AFFILIATED LAW COLLEGES.
  • விண்ணப்பதாரர்கள் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • NOTE: THOSE WHO ARE APPLYING FOR MORE THAN ONE COURSE IN SCHOOL OF EXCELLENCE IN LAW MUST SUBMIT SEPARATE APPLICATION FOR EACH COURSE, AS THE UNIVERSITY RELEASES SEPARATE MERIT LIST FOR EACH COURSE.(HOWEVER, ONE APPLICATION IS ENOUGH FOR APPLYING TO B.A., LL.B. (HONS.) AND B.B.A., LL.B.(HONS.))
  • குறிப்பு: சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் தனி தனி விண்ணப்பம் தர வேண்டும்





  •  
  • தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்


  • NOTE: REGARDING ADMISSION TO AFFILIATED LAW COLLEGES (GOVERNMENT AND PRIVATE) ONE APPLICATION HAS TO BE SUBMITTED.
  • குறிப்பு: இணைவுப்பெற்ற அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.





Last Date : 31-5-2024

🔰🔰🔰🔰

⚖️

🙏