The National Testing Agency (NTA) is inviting Online Applications for NEET (LO)-2025 for admission to the undergraduate medical courses in all medical institutions in Indis.
The National Testing Agency (NTA) is inviting Online Applications for NEET (LO)-2025 for admission to the undergraduate medical courses in all medical institutions in Indis.
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு இணையதள வழியில் மத்திய அரசு இலவச பயிற்சி வழங்குகிறது.
நம்நாட்டில் எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேரவும் ஜேஇஇ, கிளாட் போன்ற தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மாணவர்கள் தொடர் பயிற்சி பெற வேண்டிய நிலையுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் பணிகளை மத்திய கல்வி அமைச்சகமும் முன்னெடுத்துள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) சார்பில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கென பிரத்யேக சதீ (sathee) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் அடைந்துள்ளதாக தெரிகிறது.
இதுதவிர க்யூட், கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள், எஸ்எஸ்சி, வங்கி போன்ற பணித் தேர்வுகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்துக்கு சென்று எந்த தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமோ அதற்கு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். மேலும், அந்த இணையதளத்தின் கீழ் பகுதியில் நுழைவுத் தேர்வுகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள், எவ்வளவு நேரங்கள் உள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பயிற்சியில் இணைய👉https://sathee.prutor.ai/
🙏
📣அனைத்து📣
📣நண்பர்களுக்கும்📣
📣 பகிருங்கள். 📣
🎯
NEET UG Result 2024 Link: The National Testing Agency (NTA) today released the National Eligibility cum Entrance Test Undergraduate 2024 result. Candidates who appeared in the examination can check their respective results through the official website — exams.nta.ac.in.
🔰🔰🔰
The National Testing Agency (NTA) is set to release the NEET UG Result 2024 on 14th June 2024. The NEET UG exam, held on 5th May 2024, saw numerous candidates participating and eagerly awaiting their results.
Candidates can check the department’s official website to stay updated with the information regarding NEET UG 2024 result.
💉💉💉💉💉💉💉💉💉💉
How to Check NEET UG Result 2024
To check your NEET UG 2024 Result online, candidates need to follow these steps, which are necessary and mentioned below
National Eligibility Entrance Test(NEET) is conducted by the National Testing Agency (NTA) every year across the country. It is the common examination for those students who are seeking admission to undergraduate medical courses in the medical colleges of the country.
In India, a wide number of students appear for the NEET examination which is scheduled to be conducted on 05 May 2024 this year. The examination NEET Admit Card is expected to be released in the 4th week of April 2024. The students can get their city intimation slip before releasing the admit card on the official website. The authority will also send an e-mail to the registered student’s ID to be notified of the exam. Students are advised to visit the official website to download their admit cards.
After the city intimation is published on the website, the students can download their admit within 2-3 days. To download a hall ticket, candidates can follow the below-mentioned steps:-
Last chance to Register the National Eligibility-cum-Entrance Test [(NEET (UG)]-2024
Candidates should note that this is a one-time opportunity, so they are advised to use it carefully as no further chance will be given for applying for NEET (UG) - 2024. Please make a note of this and fill the online Application Form accordingly.
More details contact👉Click Here
🙏
Extending the Registration for NEET(UG) - 2024
For More Details and Apply online
👇
🙏
Information bulletin
👇
👆
📣📣📣📣
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு , exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி
மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Apply online
👇
🔰🔰🔰🔰🔰
💊💊💊💊
🩺🩺🩺
🎯
🎓
🙏
நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நாடு முழுவதும் 11.46 லட்சம் பேரும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் உட்பட 78,693 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளைவிட மதிப்பெண் விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 700 முதல் 720 வரை 31 பேரும், 650 முதல் 699 வரை 355 பேரும், 600 முதல் 649 வரை 1,133 பேரும், 500 முதல் 599 வரை 4,882 பேரும், 400 முதல் 499 வரை 7,833 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர். மேலும், 501 முதல் 600 வரை 23 பேரும், 401 முதல் 500 வரை 127 பேரும், 301 முதல் 400 வரை 437 பேரும், 201 முதல் 300 வரை 651 பேரும், 107 முதல் 200 வரை 2,741 மாணவர்களும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2018-ல் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர், 2019-ல் 6 பேருக்கு மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. பின்னர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத தனி உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.
அதன்படி, 2020-ல் 435 பேர், 2021-ல் 540 பேர், 2022-ல் 567 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்தாண்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வாயிலாக 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்கள் மூலம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக கடந்த அதிமுக ஆட்சியில், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், இலவச நீட் பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட்டு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போதைய திமுகஅரசும் தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் சுமார் 400 அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இநத் நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு 3வது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 50 பேரும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
NEET - தேர்வு முடிவு.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (செப்.7) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒஎப்ஆர் ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நீட்' தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Result👉http://neet.nta.nic.in
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் 2/4/2022 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும் மே 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🙏