Search This Blog

16/06/2023

நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு அறிமுகம்

 சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு- அறிமுகம்.


திருநெல்வேலி: இந்தியாவில் முதல்முறையாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் 54-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த கல்விசார் நிலைக்குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசினார். பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் மேற்கொள்ள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் புதிய துறைகள், பாடத்திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கூறியதாவது:

பல்கலைக்கழகத்தின்கீழ் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் செயல்படும் கடல்சார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தனியார் துறை பங்களிப்புடன் ரூ.600 கோடியில் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் முதலீட்டில் கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பூங்காவில் 50 பொருட்களை விஞ்ஞானிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment