Search This Blog

22/08/2022

12ம் வகுப்புத் துணை தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

 துணைத் தேர்வில், தகுதியான மதிப்பெண் வழங்கவில்லை என்று தேர்வர்கள் கருதினால் விடைத்தாள் நகல்  மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும் 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 275 ஆகும். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.


உயிரியல் பாடத்திற்கு மறுக்கூட்டல் கட்டணமாக ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205ம் செலுத்த வேண்டும். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

     🙏


No comments:

Post a Comment