Search This Blog

17/10/2023

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF),அக். 20 முதல் விண்ணப்பிக்கலாம்.

 


தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 - 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.


இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in/) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விபரங்களுக்கு


👇


👉https://trb.tn.gov.in/


👉CMRF


🙏




11/10/2023

Apply temporary basis to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service. Last Date: 31_10_2023

 Applications are invited only from women candidates through online mode up to 31.10.2023 for direct recruitment on temporary basis to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service.


 No. of vacancies: 2250


Date of Notification 11.10.2023


Last date for submission of Application (Online Registration & Online payment)   :  31.10.2023


EDUCATIONAL QUALIFICATION:

Candidate shall possess the following qualification on the date of this notification

viz. 11.10.2023

(i) Must have passed Higher Secondary (+2).

(ii) Must have undergone two years Multi – Purpose Health 

Workers (Female) training Course / Auxiliary Nurse 

Midwifery Training Course awarded by the Director of 

Public Health and Preventive Medicine.;

(iii) A certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and 

(iv) Must possess physical fitness for camp life.Provided that those who have undergone 18 months 

Multi – Purpose Health Workers (Female) Training 

Course / Auxiliary Nurse Midwifery Training Course 

awarded by the Director of Public Health and Preventive 

Medicine and have passed S.S.L.C (10th Standard) prior to 15.11.2012 are also eligible.


More Details

👉https://www.mrb.tn.gov.in


🔰🔰🔰

🙏


04/10/2023

கேட் தேர்வு விண்ணப்பிக்க அக்.5 வரை வரை கால அவகாசம் நீட்டிப்பு.

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.3 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்துகிறது.

இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.30-ல் தொடங்கி செப்.29-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதுவரை சுமார் 1.38 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாமதக் கட்டணத்துடன் அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். நவ.7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். ஹால் டிக்கெட் ஜன.3-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவு மார்ச் 16-ல் வெளியாகும்.

🔰🔰🔰🔰🔰

🙏

23/09/2023

NTA-2024-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிப்பு !

 

2024-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிப்பு


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டது.

அதன்படி, இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு, முதல்கட்டமாக ஜன.24 முதல் பிப்.1 வரையும், 2-ம் கட்டமாக ஏப்.1 முதல் 15-ம்தேதி வரையும் நடத்தப்படும்


அதேபோல், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுமே 5-ம் தேதி நடைபெற உள்ளது.இதுதவிர மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை கலை,அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) மே 15 முதல் 31-ம் தேதிவரையும், முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரையும் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.


மேலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித் தேர்வு (ஜூன் பருவம்) ஜூன் 10 முதல் 21-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும்.


கணினிவழி தேர்வுகளுக்கான முடிவுகள் 3 வாரங்களில் வெளியிடப்படும். எழுத்து வடிவிலான நீட் தேர்வு முடிவு ஜூன் 2-வது வாரத்தில் வெளியாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ அறிவித்துள்ளது.



🔰🔰🔰🔰🔰


🙏





21/09/2023

UPSC- Civil Services Examination | இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு -ஓரு பார்வை.

 


இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தகுதிகள்தொகு

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • குறைந்த பட்ச கல்வித் தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும். அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினர்க்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு 37 வயதாகும்.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்தொகு

இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.

  • பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.
  • இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.


தேர்வில் இடஒதுக்கீடுதொகு

இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்.


வகுப்பினர்இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)15.0%
பழங்குடியின வகுப்பினர்கள் (ST)7.5%
இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)27%
மொத்த இட ஒதுக்கீடு49.5%
பொது ( SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட )50.5%



தேர்வு முறைகள்தொகு

  • இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
  • முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
  • முதனிலையில் தேறியவர்கள்  முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
  • முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test). 
  • முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பும்.
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்.  


    List of Civil Services:





    Mains Exam Subjects(9-Papers)
    Paper /Subject/Marks
    Paper A Compulsory Indian language -300 marks
    Paper B English 300 marks
    Paper I Essay 250 marks
    Paper II General Studies I 250 marks
    Paper III General Studies II 250 marks
    Paper IV General Studies III 250 marks
    Paper V General Studies IV 250 marks
    Paper VI Optional I 250 marks
    Paper VII Optional II 250 marks

    List of optional subject are given below:
    Civil Engineering
    Agriculture
    Psychology
    Geology
    Mechanical Engineering
    Animal Husbandry and Veterinary Science
    History
    Commerce and Accountacy
    Medical science
    Public Administration
    Botany
    Chemistry
    Geography
    Mathematics
    Electrical Engineering
    Physics
    Statistics
    Zoology
    Political Science and International Relations
    The literature of any one of the following languages: Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Marathi, Manipuri, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Kannada, Telugu, Urdu and English.


    More Info
    👇


    👆

    ✴️✴️✴️✴️✴️✴️
    ✳️✳️✳️✳️✳️
    💢💢💢💢
    🔰🔰🔰
    ✅✅
    🇮🇳

    🙏









    17/09/2023

    UPSC - ENGINEERING SERVICES EXAMINATION 2024 (LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023)

     

    UPSC

    ENGINEERING SERVICES EXAMINATION

    2024

    (LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023)




    Minimum Educational Qualification:

    For admission to the examination, a candidate must have –

    (a) obtained a degree in Engineering from a University incorporated by an Act of the Central or State Legislature in India

    or other Educational Institutions established by an Act of Parliament or declared to be deemed as Universities under Section 3

    of the University Grants Commission Act, 1956; or

    (b) passed Sections A and B of the Institution Examinations of the Institution of Engineers (India); or

    (c) obtained a degree/diploma in Engineering from such foreign University/College/Institution and under such awwalconditions as may be recognised by the Government for the purpose from time to time, or

    (d) passed Graduate Membership Examination of the Institution of Electronics and Telecommunication Engineers (India);

    or

    (e) passed Associate Membership Examination Parts II and III/Sections A and B of the Aeronautical Society of India; or

    (f) passed Graduate Membership Examination of the Institution of Electronics and Radio Engineers, London held After November, 1959


    Age Limits:

    A candidate for this examination must have attained the age of 21 years and must not have attained the age of 30 years on the 1st January, 2024 


    LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023

    More info 👉 Click Here


    🔰🔰🔰🔰🔰


    🔰🔰🔰


    🔰


    🙏


    14/09/2023

    எல்எல்எம் சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.30

     


    சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

    விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    More info 👉www.tndalu.ac.in

    🔰🔰🔰🔰🔰


    🙏

    12/09/2023

    சட்டம் பயில டிச.3-ம் தேதி கிளாட் நுழைவு தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 3 கடைசி நாள்.

     தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, வரும் டிச. 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில்இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

    அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

    இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவ.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

    விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    🔰🔰🔰🔰🔰

    🙏


    07/09/2023

    தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023,பள்ளியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 20.09.2023.


    தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, 
    அக்டோபர் 2023.
    பள்ளியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க 
    கடைசி நாள் : 20.09.2023.  



     

    விண்ணப்ப படிவம் 

    👇

     Click Here


    🔰🔰🔰


    🙏





    04/09/2023

    பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை. செப்.11 வரை விண்ணப்பிக்கலாம்.

     தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவிபெறும் பி.எட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பி.எட்) படிப்புக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், நடப்பாண்டு பி.எட் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்    www.tngasa.in  என்ற இணையதளம் வழியாக செ. 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்.சி./எஸ்.டி.பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம். இணைய வசதி இல்லதவர்கள், ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், சென்னை–15’ என்ற பெயரில் செப். 1-ம் தேதிக்குப் பின்னர் பெற்ற வரைவோலை எடுத்து நேரடியாக செலுத்தலாம்.


    மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைக் குறிப்பிட்டு, சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் 9363462070, 9363462007, 9363462042, 9363462024 ஆகிய எண்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் தொடர்புகொண்டு, உரிய வழிகாட்டுதல் பெறலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    விண்ணப்பிக்க

    👇

    https://bed.tngasa.in/



    👆


    🔰🔰🔰🔰


    🙏








    29/08/2023

    மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை குரூப் பி, சி பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆக.30 கடைசி நாள்

     மதுரை: தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் அமைகிறது.

    இதறகான நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிக்கான நிதியை கடனாக வழங்க வேண்டிய ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் இதுவரை அந்த தொகையை விடுவிக்கவில்லை. அதனால், கட்டுமானப்பணிகள் தாதமாகி கொண்டே செல்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.

    ஆனால், கட்டுமானப் பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது. ஆனால், வகுப்பறை கட்டிடம் இல்லாமல் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    எய்ம்ஸ்’ மருத்துவக் கல் லூரி கட்டி முடித்த பிறகே அந்த மாணவர்கள் மதுரைக்கு வருவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. தற்போது முதற்கட்டமாக ‘எய்ம்ஸ்’க்கான நிர்வாக அலுவலகம் தோப்பூரில் அமைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக நிர்வாக அலுவலகத்துக்கான அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் தொடங்கி உள்ளது

    தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆக.30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    3 Year சட்டப் படிப்பு விண்ணப்பிக்க ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

     சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,290 இடங்கள் உள்ளன.

    இவை நடப்பு கல்வி ஆண்டு (2023-24) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. இதுவரை 16,227 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது பெற்றோர், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்ப கட்டணம் உட்படகூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    17/08/2023

    ஆக.21 முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை .

     

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக.21 முதல் நேரடி சேர்க்கை - மாணவர்களுக்கு அழைப்பு


    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 9,820 காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி சேர்க்கை ஆக. 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 11,300 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்தாண்டு 2.46 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த மே 29-ல் தொடங்கி ஜூலை மாத இறுதி வரை நடைபெற்றது.

    9,820 இடங்கள் காலி: அதன்மூலம் இளநிலை படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 416 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும் 9,820 இடங்கள் நிரம் பாமல் காலியாக உள்ளன. இவற்றை நேரடி சேர்க்கை மூலம் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இணையதளத்தில் அறியலாம்: ‘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 முதல் நடத்தப்பட உள்ளது. நிரம்பாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் விவரங்களுக்கு 

    👇

    www.tngasa.in

    🔰🔰🔰🔰


    🙏






    JAM-2024 Registration Closes on 13 - 10 - 2023.


     


    JAM 2024 will be conducted as a Computer-Based Test in Seven test papers, namely, Biotechnology (BT), Chemistry (CY), Economics (EN), Geology (GG), Mathematics (MA), Mathematical Statistics (MS), and Physics (PH) in over 100 cities across the country. 

    Candidates who have completed an undergraduate degree or currently studying in the final year of undergraduate programme are eligible to apply for JAM 2024 examination.


    More info

     👇https://jam.iitm.ac.in/notification.php


    🔰🔰🔰🔰


    🙏