Search This Blog

24/07/2023

கால்நடை மருத்துவர்களுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

 



சென்னை: கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் தலைமை வகித்தார்.

நுண்ணறிவு துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி களைவழங்க பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி 1-2 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கால்நடை துறைவளர்ச்சி 7-8 சதவீதமாக உள்ளது.

பட்டினி இல்லாத உலகம்,வறுமை ஒழிப்பு, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என முக்கியமான நிரந்தர வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் கால்நடை துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாகஉள்ளது. இந்த வாய்ப்புகளைமாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.


🔰🔰🔰🔰


🙏





22/07/2023

இளநிலை பொறியியல் படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள்உள்ளன.


இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.


அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.


மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும். அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





21/07/2023

TN +2 Supplementary results releasing on July 24.

 





Directorate of Government Examinations, Tamil Nadu has released TN +2 Supplementary Result 2023 Date. The DGETN Class 12 supply results will be released on July 24, 2023. Candidates who have appeared for the supplementary examination can check the results through the official site of DGETN at dge.tn.gov.in.









For Results-->Click Here--


>www.dge.tn.gov.in



🔰🔰🔰🔰🔰🔰


19/07/2023

ISRO's 4 New Free Certification Courses | Join Online

 





If you are waiting for the ISRO course then we have an update for you as IIRS & ISRO Launched 4 New Free Certification Courses. In a significant stride towards promoting accessible education, the Indian Space Research Organization (ISRO) has unveiled an exciting initiative by launching four new free certification courses. These courses provide a remarkable opportunity for individuals from all walks of life to expand their knowledge and skills in various scientific and technical domains. With the convenience of online learning, anyone can now enroll in these courses and embark on a journey of self-improvement, regardless of their geographical location or educational background.

The Indian Space Research Organization has long been at the forefront of technological advancements and space exploration. With its rich experience and expertise, ISRO recognizes the value of imparting knowledge and empowering individuals with the necessary tools to contribute to the scientific community. By introducing these free certification courses, ISRO is breaking down barriers and making quality education accessible to a wider audience.

Course 1: Course-ID-120 : Course name : Satellite meteorology applications in weather and climate studies. Registration will start from 17 July 2023

The course is designed with a view to provide participants an understanding of the scientific concepts and an overview of approaches & pathways of understanding weather and climate using satellite data. The participants will also gain knowledge and ability to access, analyze, and apply satellite based data products for weather and climate studies. They will also understand the advantages and usages of satellite based meteorological observations for monitoring a variety of weather phenomenon and for operational weather services including numerical weather prediction.

Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here

Course 2: Course-ID-117 : Course name : Geospatial Technology for Archeological studies. Registration will start from 17 July 2023

Geospatial technologies undeniably play a significant role in understanding and preserving archaeological histories. It has been widely used
for archaeological studies since past few decades. Archaeology refers to the study of spatial dimension of human behaviour over time. This suggests that archaeology always has a geospatial component to it. Geospatial technologies can be used for many purposes, such as historical
documentation, digital preservation and conservation, cross-comparisons, monitoring of shape and colors, simulation of aging and deterioration, virtual reality/computer graphics applications of archaeology sites. We invite you to attend this training program on Geospatial Technology for Archaeological Studies. The course is scheduled from August 07-11, 2023.

Course Fee: There is no course fee for attending this programme.
Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, CLICK HERE

Course 3: One day workshop On Integration of ground-based in situ observations/measurements with EO data for enhanced Geological Applications: Advantages and Challenges

We invite you to attend this one-day online workshop on “Integration of ground-based in situ observations/measurements with EO data for enhanced Geological Applications: Advantages and Challenges”. The workshop is scheduled on July 27, 2023. The course will contain lectures covering extensive research conducted on various aspects of geological applications using integrated EO and ground-based measurements

approach. This information will help in gaining a broad perspective on geological applications in various regions of India.

Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here


Course 4: Course-ID-3001 : Course name : Overview of Space Science.Date : 20th July, 2023 to 20th August, 2023

The Science Programme Office, ISRO HQ in association with Indian Institute of Remote Sensing (IIRS), ISRO, Dehradun conducts the Space science and Technology Awareness Training (START) programme. START is an introductory level online training in space science and

technology for the post-graduate and final year under-graduate students of science and technology.


Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here

I

18/07/2023

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.

 சென்னை: தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 30க்குள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், அதாவது 2023-2024 ம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்று மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே அதற்கு முன்னேற்பாடாகவும், மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். தங்களது வகுப்பாசிரியர்கள் உதவியோடு மாணவர்கள் இந்த மின்னஞ்சல் கணக்கை உருவாக்க வேண்டும். மேலும் மின்னஞ்சலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க வேண்டும். இதன் பின்னர் மாணவர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இதையடுத்து மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து cgtnss@gmail.com என்ற முகவரிக்கு "நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்" என்றும், "உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன" என்ற விவரத்தையும் அந்த மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.


🙏


சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு ஆக.12 முதல் பயிற்சி தொடக்கம்

 





சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ்அகாடமியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல் நிலைத் தேர்வுக்கு கட்டணச் சலுகையுடனான 6 மாத கால பயிற்சி வரும் ஆக.12-ம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.


இப்பணிகளுக்காக தேர்வர்களைத் தயார் செய்யும் நோக்கில் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியும் தமிழ் கட்டாயத் தகுதிப்பாடத்துக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன்மூலம் பயிற்சி வகுப்புகள் 6 மாதகாலம் நடைபெறும்.


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத் தேர்வர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சியில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து இம்மாதம் 31-ம்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 எண்களில் அழைக்கலாம்..




ADMISSION Open PHARM.D (Doctor of Pharmacy) DEGREE COURSE, Last Date : 26--07--2023

 





ADMISSION TO PHARM.D DEGREE COURSE

The Online submission of Application form for admission to Pharm.D Degree Course for 2023-2024 session in Government seats in Self-Financing Colleges affiliated to The TamilnaduDr. M.G.R Medical University can be accessed from the following websites. 

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.org

✔️✔️✔️✔️✔️

DURATION OF THE COURSE:-

a) Pharm D: The duration of the course shall be six academic years( 5 years of study and one year of intership or residency)

b) Pharm D. (Post Baccalaureate):- This is a postgraduate entry course to the 4thYear of the Pharm D. Course and the student should undergo the Pharm D. Post Baccalaureate programme for three academic years (fourth, fifth and Sixth Years of the Pharm D. Programme) (Two Years of academic study and one year of intership or residency)

🔰🔰🔰🔰🔰

AGE LIMIT :–Candidates should have completed 17 years of age as on 31st December 2023.

✅✅✅✅✅

6.EDUCATIONAL QUALIFICATIONS:

Candidates should have passed in all the subjects of the qualifying Examination of the HigherSecondary Course conducted by the Tamil Nadu State Board or any other Equivalent Board in the following group of subjects with minimum eligible marks.

a) A pass in 10, +2 examination with physics and chemistry as compulsory subjects along with one of the following subjects:

 Mathematics or Biology.

Note : Candidates who have completed D.Pharm Courses can apply for Pharm.D, however their admission will be considered based on their marks in the H.Sc exam and the duration for them in Pharm.D course will be six years.

Pharm D. (POST BACCALAUREATE) COURSE:-(GRADUATE ENTRY LEVEL) A pass in B.Pharm from an institution approved by the Pharmacy Council of India under Section12 of the Pharmacy Act.

✳️✳️✳️✳️✳️

Last date for submitting the online application : 26-07- 2023 upto 05.00 P.M.

💊💊💊💊💊💊

Apply Online👉  www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.org


🙏











16/07/2023

சிபிஎஸ்இ பொது தேர்வு தேதி அறிவிப்பு

 சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட் டுள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.15 முதல் மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஏப்.10-ம்தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.


🙏


TN Dr.AMBEDKAR LAW UNIVERSITY- Admission Open 3 Year- LLB | Last Date: 10-8-2023




 THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY

(State University Established by Act No.43 of 1997)

ADMISSION NOTIFICATION : 2023-2024

Applications are invited from the Eligible Candidates through Online Mode for Admission into the 3 Year Law Degree Courses for the Academic Year 2023-2024 

⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

* 3 Year LL.B.(Hons.) School of Excellence in Law The Tamil Nadu Dr.Ambedkar Law University, Perungudi Campus, Dr. M.G.R. Salai, Near MRTS Taramani Railway Station, Chennai -113.              

*3 Year LL.B. Degree Course -Affiliated Law Colleges in Tamil Nadu  .
🔰🔰🔰

Qualifying Examination

An Under Graduate Degree 
in any discipline (10+2+3 or 
10+3+3 streams alone are 
eligible).

🔰🔰🔰🔰

Separate ‘Application Form’ should be submitted for ‘School of Excellence in Law and Affiliated Law Colleges in 
 Tamil Nadu’. Candidates can apply through Online only, for which applicants have to pay Application processing Fee 
 through ‘Online Payment Gateway’ only. Online Application Forms and Prospectus are available in the University 
 website - www.tndalu.ac.in.
⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
Mode of Selection: Selection for Admission will be conducted only through Online. Candidates will be selected purely on 
Merit based on their performance in the Qualifying Examination and as per the Rules of Reservation prescribed by the 
Government of Tamil Nadu.
✳️✳️✳️✳️✳️✳️

Due to the spread of Corona Virus, it is not safe to gather on the University Campus. Therefore, enquiries relating to
Admissions can be contacted through Telephone Nos. 044-24641919/24957414.
🔰🔰🔰

Submission of Application through
Online Mode only 
✅✅✅

Date of Opening:  17-07-2023
Date of Closing:   10-08-2023
✅✅✅

Notification for LL.M. Degree Course will be announced shortly in the University Official Website 
https://www.tndalu.ac.in/

More info 


Online Application 👉Click Here

🔰🔰🔰


🙏










15/07/2023

Health Inspector -II, No of posts-1066,Last Date: 31-07-2023







Applications are invited only from male candidates through online mode up to 31.07.2023 for direct recruitment on temporary basis to the post of Health Inspector Grade-II in Tamil Nadu Public Health subordinate Service.


No. of vacancies: 1066


Last date for submission of Application

(Online Registration & Online payment):  31.07.2023




EDUCATIONAL QUALIFICATION:

Candidate shall possess the following qualification as per G.O (Ms).No.104, Health and

Family Welfare (L1) Department, Dated:28.03.2023 on the date of this notification viz.11.07.2023.

(i) Must have passed plus two with Biology or Botany and Zoology.

(ii) Must have passed Tamil Language as a subject in S.S.L.C Level

(iii) Must possess Two years Multipurpose Health Worker (Male) course / Health

Inspector/ Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine.




Fees

SC / SCA / ST / DAP(PH)-- Rs. 300/-

Others Rs. 600/


More details 👉 www.mrb.tn.gov.in.


👉www.twitter.com/mrb_tn


👉Notification

 


🔰🔰🔰🔰

🙏






14/07/2023

பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

 கோவை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கோவையிலுள்ள, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இந்நிலையில் 2023- 2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூன் 28-ம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை 967 பேர் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்புவோர், https://www.ptbe-tnea.com/ என்ற இணையவழியில் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2590080, 94869 77757 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 2.35 க்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3:



இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3: புதிய வரலாற்றைப் பதிவு செய்யக் காத்திருக்கும் இஸ்ரோ.

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) விண்ணில் பாய்கிறது.


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனா். அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.


மத்திய அமைச்சா் வருகை: சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தாா். அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வெள்ளிக்கிழமை சென்று ராக்கெட் ஏவுதலை நேரில் பாா்வையிடுகிறாா். மற்றொரு புறம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியைப் பாா்வையிடுவதற்காக இஸ்ரோ தளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனா். நிலவின் தென்துருவம்: சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.


நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன. சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் ஏற்கெனவே நிலவைச் சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதால் இந்த முறை ஆா்பிட்டரை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பவில்லை. அதேவேளையில், தற்போது அனுப்பப்படும் லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் உந்து கலன் மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அதன்பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் நிலவில் அது இறங்கும். தொடா்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளன. இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக் கொள்ளும். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு சந்திரயான்-2 கலம், அதே ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதி செயலிழந்தது.அதிலிருந்து பெற்ற படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சாதனையை சந்திரயான்-3 மூலம் படைக்கக் காத்திருக்கிறது இஸ்ரோ.


மேலும் தகவல் பெற

👇

https://www.isro.gov.in/Chandrayaan3_New.html


கிளிக் பண்ணுங்க


💢💢💢💢

✴️✴️✴️

✳️✳️

🚀




13/07/2023

BEO Exam Syllabus & Question Paper.

 BEO Exam 

Syllabus

 &

 Question

👇

Click Here

👆

💢💢💢💢💢💢💢

🙏

நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு.

 


எம்பி பி எஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 'முதுநிலை நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு மாற்றாக

‘நே ஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெ க்ஸ்ட்)’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டதுடன் 2019 பேட்ச்  மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு வருகிற ஜூலை 28 ஆம் தேதி

நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சி த் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 'நெ க்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.





11/07/2023

செயற்கை நுண்ணறிவு: படிப்பும் வேலை வாய்ப்பும்

 


உயர்கல்வி படிப்பவர்கள், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கான சவால்களில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ’செயற்கை நுண்ணறிவு’. பணி வாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அறிந்துகொள்வது, அந்தத் துறையில் பணி வாய்ப்புகளை நாடுபவர்களுக்கு அவசியமாகிறது.

கடந்த காலத்தில் இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் எனப் பணியாளர்களுக்கு பதற்றம் தந்தவற்றின் வரிசையில் அண்மைக்கால வரவுதான் இந்த செயற்கை நுண்ணறிவு. மனித உடல் உழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. கைபேசி முதல் தானியங்கிப் போக்குவரத்துவரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நுகரத் தொடங்கியிருக்கிறோம்.

பணி வாய்ப்பும் உண்டு

புழக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பைப் பறிப்பது நிச்சயம் என்றாலும், அதைவிட அதிகமான பணிவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கும் என்கிறது உலக பொருளாதார கூட்டமைப்பு. கல்வி - வேலைவாய்ப்புத் துறையில் இருப்பவர்கள், அதை ஒட்டிய மாற்றங்களுக்கு தயாராவதே முன்னேற்றம் தரும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் எட்டாம் வகுப்பு முதற்கொண்டே செயற்கை நுண்ணறிவைச் சேர்க்க முடிவுசெய்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறை மாணவர்கள் நேரடியாகச் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு குறிவைத்து தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை நடை முறைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. வாகன உற்பத்தி, மென்பொருள், நிதி ஆலோசனை போன்ற தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. அனைத்துமே தொடக்க நிலையில் இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப திறன்களை பெருக்கிக்கொள்ளலாம்.

தானியங்கி நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிலைகளில், துணைசெய்யும் நுண்ணறிவு என்பதே பொதுப் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. இதில் மனித உத்தரவின் நிரல்களுக்குப் பணிந்து, தேவையானது செய்து முடிக்கப்படும். ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இடங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம். இரண்டாவதாக, விரிவான நுண்ணறிவு என்பதில் மனிதர்களுடன் இணைந்தே பங்காற்றும். மனித மூளையின் நினைவுத்திறன், தர்க்கங்களை அலசுதல் உள்ளிட்டவற்றில் விரைந்து முடிவுகளை வழங்கும்.

மனித மூளையின் அனுபவ அறிவு, உணர்ச்சி ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அனைத்திலும் இயந்திர உதவியை இதன் மூலம் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக மனிதர்கள் ஒதுங்கிக்கொள்ள, முழுவதும் இயந்திரங்களே ஆராய்ந்து செயல்படும் தானியங்கி நுண்ணறிவு வருகிறது. தற்போது பரிசோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் தானியங்கி வாகனங்கள் இதற்கு உதாரணம். இவை அனைத்தின் தொகுப்பாக ‘Humanoids’ எனப்படும் மனித மூளையை நகலெடுத்த செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்கள் வரவிருக்கின்றன.

படிப்புகள் என்ன?

அடிப்படைக் கணினி அறிவியல், பொறியியல் படிப்புகளுடன் ஆழ்நிலைக் கற்றல் (Deep Learning), இயந்திரக் கற்றல் (Machine Learning) போன்றவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பாதை அமைத்துத் தரும். தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் இவற்றைப் பகுதி நேர சான்றிதழ், பட்டயப் படிப்பாக வழங்குகின்றன. இளநிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பொறியியல் படிப்புகளை முடிப்பவர்கள் முதுநிலையில் ‘ரோபாடிக்ஸ் - ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ படிப்பைப் படிக்கலாம். முதுநிலை பட்டயப் படிப்பாகவும் பல கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பை வழங்குகின்றன.

பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்கள்வரை ஏராளமான நேரடி வேலைவாய்ப்புகள் உள்ளன. கணினிமயமாக்கம் அனைத்து துறையிலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போன்று, அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவும் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது. அதற்கு இப்போதே தயாராவது நல்லது.

🙏




ISRO Open Online Courses on Space Technology for School Students and Space Enthusiasts



Requirements

Basic understanding of Science, technology and Mathematics. 

Course description

This course offers basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the younger students with Challenges & Opportunities . The course is aimed at creating awareness about the emerging trends in science and technology amongst the youngsters, who are the future building blocks of our nation. We aims at "Ignite the mind" of young generation on space technology. The programme is also expected to encourage more students to pursue in Science, Technology, Engineering and Mathematics (STEM) based research /career.

ISRO Online Course on Space Technology Course Content

  • Introduction to Space.
  • Basics of Sky Observation.
  • Space in India.
  • Exoplanets and Life Components.
  • Challenges in Space.
  • Our nearest star is the Sun and the Aditya Mission.
  • ISRO Launch Vehicles.
  • Physics behind satellites.
  • ISRO Satellites.
  • ISRO Chandrayaan Mission.
  • International Space Station (ISS).
  • Space Tourism.
  • Remote Sensing Technology.
  • Satellite Payload and Applications.
  • Careers in Space.
  • Gaganyaan.
  • ISRO Mangalyaan Mission.
  • Satellite Navigation System.
  • Communication Satellites and Application.

Who this course is for:

This open course is designed for School students and space enthusiast.

Course Instructors

ISRO Scientists/Engineers.

How to Join the ISRO Online course👉click 👉👉link.






ஆசிரியர்கள் அலகு மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பிக்க ஜூலை 14 வரை அவகாசம்

 பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி எமிஸ் தளம் வழியாக நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆசிரியர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்பு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🙏



10/07/2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் நீட்டிப்பு.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 10-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பது வரும் 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 21,560 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என மொத்தம் 31,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பது மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டு, அடுத்த வாரம் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

09/07/2023

உத்தேச காலாண்டு,அரையாண்டு தேர்வு கால அட்டவணை...?

 சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரையும், அரையாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.

இதுதவிர 10, 11, 12-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.