SSC-Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023,
Qualification- Std : 10
Last Date:21-7-2023
More Details
👇
Contact
🙏
Apple online
👇
SSC-Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023,
Qualification- Std : 10
Last Date:21-7-2023
More Details
👇
Contact
🙏
Apple online
👇
பிரபல எழுத்தாளர் அமரர் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://ncet.samarth.ac.in இணையதளம் வழியாக ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று இலவசமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21-ல் அவகாசம் வழங்கப்படும். தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க
👇
🙏
பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.
பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள், 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
https:www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பகுதி நேர படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More details
and
Online Application
👇
https://www.ptbe-tnea.com/index.php#importants
🙏
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.
இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க
👇
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேவையான வழிகாட்டுதல்களை வழங்க போதிய கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர்கள் இருந்தால், எவ்வித அழுத்தமும் இன்றி அவர்கள் தங்களின் துறையை தேர்வு செய்யவும், அதற்கு உண்டான வழிகாட்டுதலை பெறவும் ஏதுவாக இருக்கும்.
மாணவர்களுக்கு பல திறன்கள் இருந்தும் அந்த திறன்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் இல்லாததால் அவர்களுக்கு எத்துறையை தேர்வு செய்வது எந்த வேலைக்கு செல்வது, தொழில் முனைவோராகலாமா, போட்டி தேர்வுக்கு தயாராகலாமா அல்லது உடனடியாக வேலைக்கு போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாத காரணத்தினால் மூன்று ஆண்டு முடிவில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் போது, அவர்களால் தனக்கு தேவையான துறையை உடனடியாக அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் குறைந்த பட்சமாக 1,000 மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும். ஏற்கெனவே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலர் அமர்த்தப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல் கல்வி இருந்தால் மட்டுமே அவர்களால் ஒரு மாணவனை அடுத்த நிலைக்கு தயார் செய்ய முடியும்.
எனவே, இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும் தேவையான வழிகாட்டுதலுக்கு உண்டான படிப்பை வழங்கவும் பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறையின் சார்பாக இரண்டு ஆண்டு முதுகலை கேரியர் கைடன்ஸ் மற்றும் ஓராண்டு பட்டய படிப்பான கேரியர் கைடன்ஸ் ஃபார் எக்ஸிக்யூடிவ்ஸ் (இணையவழி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளில் சேர ஏதாவது ஓர் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு இணையவழி பட்டயப்படிப்புக்கு முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://b-u.ac.in/146/pg-admission என்ற இணைய தளத்தில் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை படித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேரியர் கைடாகவும், கல்லூரிகளில் வேலை வாய்ப்பு அலுவலராகவும், நிறுவனங்களில் பயிற்சியாளர் மற்றும் ஹெச்ஆர் துறையிலும் வேலை பார்க்கலாம்.
மேலும் மாணவர்கள் சொந்தமாக வழிகாட்டுதல் மையத்தையும் தொடங்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2428239, 95650015656, 9566849767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Apply online
👇
https://b-u.ac.in/146/pg-admission
🙏
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்தஇடங்களில் 2023–24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியாக உள்ளது. மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.
தரவரிசை பட்டியல் காண
👇
🙏
எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்தலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை ஏற்று, கடந்த மே 20-ம் தேதி இணைய வழியில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பு வசதிகளை ஏஐசிடிஇ ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் மூலம் அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக கருதி, எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்துவதற்கு 2023-24 முதல் 2027-28 வரை 5 ஆண்டு காலத்துக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.07 லட்சம் பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.
2023–24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே 8-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 2.46 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, மாணவர் சேர்க்கை மே 29-ம்தேதி தொடங்கியது.
முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடந்தது. இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 31 ஆயிரத்து 488 இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த உடன், ஜூன் 22-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், கல்லுாரி திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அரசு அறிவிப்பு.
2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதியம் வழங்க, ரூ.125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து , அரசுக் கல்லூரிகளாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டன.இந்த 41 கல்லூரிகளையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து, 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் 5699 (2423 + 41895 + 41381) கவுரவ விரிவுரையாளர்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2023 மற்றும் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை ரூ.125,37,80,000/- (நூற்று இருபத்தைந்து கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.
i) கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ii) தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் பட்சத்தில் அப்பணியிடத்தினை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும்.
iii) அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
iv) ஆசிரியர் - மாணாக்கர்கள் விகிதாச்சாரம் 1 : 30 என்ற விகிதாச் சாரத்தின்படி அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.
இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.
5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் இருக்கின்றன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வியாண்டு (2023-24) சேர்க்கைக்கு 21,362 பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் இணையவழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளையுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.
தொடர்ந்து கலந்தாய்வு இணைய வழியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 20-ல் சேர்க்கைக் கடிதம்: சேர்க்கை இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூன் 26-ம் தேதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துவிட வேண்டும்.
சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. தகுதியான மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை கடிதம் வழங்கப்படும். பின்பு மாணவர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கூடுதல் விவரங்களை http://tndalu.ac.in/என்ற இணையதளம் வாயிலாக அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
கூடுதல் விவரங்களுக்கு
👇
✳️
🙏
B.E/B.Tech கலந்தாய்வுக்கு ஜூன் 26-ம் தேதி தரிவரிசை பட்டியல் வெளியீடு.
✳️✳️✳️✳️✳️✳️
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ல் தொடங்கி ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சமர்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை துறை சார்ந்த அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.
தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின் கலந்தாய்வு ஜூலை 2-ல் தொடங்கி நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
✴️✴️✴️
🙏
நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நாடு முழுவதும் 11.46 லட்சம் பேரும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் உட்பட 78,693 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளைவிட மதிப்பெண் விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 700 முதல் 720 வரை 31 பேரும், 650 முதல் 699 வரை 355 பேரும், 600 முதல் 649 வரை 1,133 பேரும், 500 முதல் 599 வரை 4,882 பேரும், 400 முதல் 499 வரை 7,833 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர். மேலும், 501 முதல் 600 வரை 23 பேரும், 401 முதல் 500 வரை 127 பேரும், 301 முதல் 400 வரை 437 பேரும், 201 முதல் 300 வரை 651 பேரும், 107 முதல் 200 வரை 2,741 மாணவர்களும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2018-ல் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர், 2019-ல் 6 பேருக்கு மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. பின்னர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத தனி உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.
அதன்படி, 2020-ல் 435 பேர், 2021-ல் 540 பேர், 2022-ல் 567 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்தாண்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வாயிலாக 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 22.06.2023 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வித் துறையின் தொலைபேசி எண்:
044-22351018, 22351014, 22351015 Extn. 356, 358
நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56.21%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 78,693 (54.45%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுதவிர தமிழக மாணவர் ஜே.பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நடப்பாண்டு நீட் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 4 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு 14,979 மாணவர்கள் நீட் தேர்வெழுதியதில் 4,118 (27%) பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாவட்ட அளவிலான தேர்ச்சியில் அதிகபட்சமாக சேலத்தில் 519 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 பேர் தேர்வில் பங்கேற்றதில் வெறும் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அனுபவங்களில் அடிப்படையில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம்
செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்ளை அணுகவும்.
கடைசி நாள்:28-6-2013 ,5 p.m
👇
✳️✳️
✴️✴️
🙏