27/11/2025

IIT Madras Institute Open House - January 2nd-4th 2026,Last Date to Register 5th December 2025

 


👇


இந்த ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். பதிவு செய்ய

கடைசி நாள் – 5 டிசம்பர் 2025

பதிவு இணைப்பு: shaastra.org/open-house

வாட்ஸ்அப் சேனல்: “IITM Open House 2026”

Institute Open House?

The IIT Madras Institute Open House is your exclusive pass to see what happens inside one of India’s premier institutions. As part of Shaastra 2026, our 'Anaivarukkum IITM' (IITM for All) initiative invites you—students, families, and tech enthusiasts alike—to explore our campus and witness the future being built today.

This is your chance to interact with top researchers, get hands-on with exciting demos, and tour state-of-the-art facilities. Come get inspired, see what's possible, and discover the innovations that will shape our future.





ஐஐடி மெட்ராசின் ‘இன்ஸ்டிட்யூட் ஓபன் ஹவுஸ் 2026’ -இல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தாக்க மையங்கள், மாணவர்களின் தொழில்நுட்ப திட்டங்கள் போன்றவற்றை நேரில் சென்று காணலாம்.



ஐஐடிமெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில்,


“அனைவருக்கும் IITM என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்ததை முன்னிட்டு, இந்த ஆண்டும் நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் பெருமளவில் வரவேண்டும். இதன் மூலம் அவர்கள் ஊக்கம்பெற்று, எதிர்காலத்தில் நமது மாணவர்களாக திரும்ப வருவார்கள்,” என்றார்.


பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் கூறுகையில், “ஐஐடி மெட்ராஸ் தன்னுடைய நவீன ஆய்வகங்களை பொதுமக்கள் முன் திறந்து காட்டும் இந்த ஆண்டு விழா, IIT-இல் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்,” என்றார்.


மாணவர் டீன் பேராசிரியர் என். கும்மடி கூறுகையில்,

“இது அனைத்து மக்களும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நேரில் வந்துபார்க்கவும், இங்கு நடைபெறும் முன்னோடியான ஆராய்ச்சிகளை அனுபவிக்கவும் ஒரு அரிய வாய்ப்பு,” என்றார்.


இந்த ஆண்டு நிகழ்ச்சி, ஐஐடி மெட்ராஸ் ஆண்டு தொழில்நுட்ப விழா Shaastra 2026 உடன் இணைந்து நடைபெறுகிறது. இதன் மூலம் வளாகத்தின் புதுமை கலாச்சாரத்தையும், ஆராய்ச்சி எவ்வாறு நிஜ உலகத் தீர்வுகளாக மாறுகிறது என்பதையும் மக்கள் நேரடியாக காணலாம்.




🙏











23/11/2025

CLAT-Admit Cards Released -Exam Date. 7/12/2025

 



Admit Cards for UG and PG CLAT 2026 will be available for registered candidates to 

download from their application portal from November 22, 2025 to until 01:30 pm, of December 7,2025


Exam date: December 07, 2025. 

Candidates are requested to follow the steps given below to download their Admit Card: 

1) Login to your CLAT 2026 account; 

2) Click on the ‘Download Admit Card’ button. 

For any assistance, please reach us at: 

Email: clat@consortiumofnlus.ac.in 

Phone: 080-47162020 (Monday to Saturday, from 10:00 A.M. to 05:00 P.M.)


Clat admit card download 

Lnk

👇

https://consortiumofnlus.ac.in/clat-2026/

🖕


All The Best


🙏



22/11/2025

கடல் சார் படிப்பு - ஓரு பார்வை.

கடல் சார் படிப்பு - ஓரு பார்வை.



இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 95% சரக்குகள் கப்பல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன. 7,500 கி.மீ. தூரம் கொண்ட இந்தியக் கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும் 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் உள்ளன. அந்த அளவுக்குக் கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கப்பலில் பொறியாளர் ஆக வேண்டும் என்றால் மரைன் இன்ஜினீயரிங்கும் கேப்டனாக வேண்டும் என்றால் பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் என்கிற கப்பல்துறை அறிவியல் படிப்பையும் படிக்க வேண்டும்.

பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்தவர்கள் இதனைப் படிக்கலாம். கப்பலில் பணிபுரிவதில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு நாட்டிக்கல் சயின்ஸ். இதைப் படித்தவர்கள் சரக்குக் கப்பல்களிலும் பயணிகள் கப்பலிலும் உலகம் முழுவதும் கடல் மார்க்கமாகப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.

கடல்சார் படிப்புகளை வழங்கும் முக்கியக் கல்வி நிறுவனமான இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University) சென்னை கிழக்குக்
கடற்கரைச் சாலையில் உத்தண்டியில் 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொச்சி, கொல்கத்தா, மும்பை துறைமுகம், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் உள்ளன.

நாட்டிக்கல் சயின்ஸ்: கடல்சார் பல்கலைக்கழகத்தின் சென்னை, கொச்சி, நவி மும்பை வளாகங்களில் பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் மூன்று ஆண்டுப் படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பில் சேர்வதற்கு இந்தப் பல்கலைக் கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 60% மதிப்பெண்களும் (பட்டி யல்சாதி, பழங்குடியின மாணவர்களுக்கு 5% மதிப்பெண் சலுகை உண்டு) ஆங்கிலத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

திருமணம் ஆகி இருக்கக் கூடாது. நல்ல உடல்தகுதியும் தெளிவான கண் பார்வையும் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையின்போது இதற்கான மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டி வரும். வளாகத்தில் தங்கிப் படிக்க வேண்டும். படிக்கும்போதே கப்பலில் நேர்முகப் பயிற்சி பெற வேண்டியதிருக்கும்.

எனவே, இப்படிப்பில் சேரும் மாணவர்கள் பாஸ்போர்ட் வாங்கி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். படிப்பை முடித்த பிறகு மரைன் ஆபரேஷன் மேனேஜர், ஷிப்பிங் ஏஜென்ட், மரைன் இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், டெக் ஆபீசர், மரைன் டெர்மினல் மேனேஜர், மரைன் பைலட், மரைன் டெக்னீஷியன் போன்ற பணிகளில் சேரலாம்.


டிப்ளமோ படிப்பு: மெர்ச்சன்ட் நேவி பணி என்பது நல்ல ஊதியத்துடன், சவாலும் சாகசமும் நிறைந்த பணி. கப்பலில் தொடக்கநிலை ஊழியர்களாகப் பணிபுரியும்போது பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து இருக்க வேண்டியிருக்கும். அதற்குரிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சில மாதங்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்தால், அடுத்த ஓரிரு மாதங்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். இந்தப் பணிகளுக்கு ஏற்ற உடல்தகுதியும் மனஉறுதி யும் இருப்பவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

நாட்டிக்கல் சயின்ஸ் டிப்ளமோ (DNC) ஓராண்டுப் படிப்பைக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் சென்னை, நவி மும்பை வளாகங்களில் படிக்கலாம். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த பிளஸ் டூ மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். பி.எஸ்சி. இயற்பியல், கணிதம், வேதியியல் அல்லது எலெக்ட்ரானிகஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி. படித்த மாணவர்களும் பி.இ. பி.டெக். படித்த மாணவர்களும் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சேரக் கப்பல் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் பெறவேண்டியதும் அவசியம்.

இப்படிப்பில் சேரவும் நுழைவுத் தேர்வு உண்டு. டிப்ளமோ முடித்தவர்கள் மெர்ச்சன்ட் நேவியில் டெக் ஆபீசர் பணியில் சேர்வதற்கு டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் நடத்தும் தகுதித் தேர்விலும் (Cerificate of Competency - CoC) தேர்ச்சிபெற வேண்டும்.

டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் நேவிகேட்டிங் ஆபீசர், ஷிப் சர்வேயர், போர்ட் மேனேஜர், மரைன் சேஃப்டி இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளில் சேரலாம். இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள், 18 மாதங்கள் மெர்ச்சன்ட் நேவியில் டெக் கேடட்டாக நேர்முகப் பயிற்சியுடன் உரிய தேர்வுகளையும் எழுதி பி.எஸ்சி. அப்ளைடு நாட்டிக்கல் சயின்ஸ் பட்டத்தைப் பெறவும் வாய்ப்பு உண்டு.

கடற்படையில் பி.டெக். படிக்கலாம்! - இந்தியக் கடற்படையில் பணிபுரிய (Cadet Entry Scheme) விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் கேரளம் எழில்மலையில் உள்ள இந்தியன் நேவல் அகாடமியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 70% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவர்கள் இப்படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இருக்கும். படிப்பதற்கு மாணவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. படிப்பை முடித்தவர்களுக்கு பி.டெக். பட்டமும் இந்தியக் கடற்படையில் சப் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணிபுரியும் வாய்ப்பும் வழங்கப்படும்.


💢💢💢


🙏



20/11/2025

11th,12th Maths MLM prepared by IRUTHYARAJ Sir Vellore-6



💢💢💢💢💢💢💢

 11th,12th Maths 

MLM 

prepared

 by 

IRUTHYARAJ Sir.

 Vellore-6

👇


IRUTHYARAJ Sir Notes



👆

✴️✴️✴️

🔰🔰

✳️

🙏

14/11/2025

வெற்றியாளராக வலம்வர... உயர் கல்வியில் கவனமும், விருப்பப் பாடமும்

 

வெற்றியாளராக வலம்வர... உயர் கல்வியில் கவனமும், விருப்பப் பாடமும்.






கல்வி என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம் பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வழிவகுப்பதே! தங்களது குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்ற பெற்றோர் எடுக்க வேண்டிய முதல் முயற்சி, சிறந்த கல்வியைக் கொடுப்பதே. கல்வி இல்லாமல் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள இயலாது. கல்வியின் முக்கியத்துவத்தைத் தங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து கவனப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய நன்மை.

உயர் கல்வியில் கவனம்: கல்வி ஒன்றுதான் மனிதர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு போகும். ஓர் ஏழை மாணவரை உலகம் வியக்கும் பணக்காரராக மாற்றும் வல்லமை கல்விக்கே உண்டு. இப்படிப்பட்ட கல்வியோடு, ஒழுக்கமான, அமைதியான, துணிச்சலான, புத்திசாலியான, செயல் வேகம் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. இவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்கினாலும், அவர்களை வெற்றி யாளர்களாக மாற்றுவது நம் அனைவரின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.


ஏனென்றால் மாணவர் களுக்குப் பள்ளிப்படிப்பின் போதும், முடித்த பின்பும் எத்தகைய உயர் கல்வியைக் கற்கலாம் என்பதில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் பல நல்ல வாய்ப்புகளை இழக்கும் மாணவர்கள் தங்களுக்கான வெற்றிப் பாதையை அடைய முடிவதில்லை.


குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மெனில், பெரும்பான்மையான மாணவர்கள் பிளஸ் 2 முடித்து ரிசல்ட் வந்த பிறகுதான் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இந்தியாவின் பிரசித்தி பெற்ற பெரும்பாலான கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களும் நுழைவுத் தேர்வுகளும் அதற்கு முன்னரே முடிந்து விடுகின்றன.

.

இதன் காரணமாக ஒரு சாதாரணமான கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு பயில வேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் சிறந்த கல்வியையும் வேலை வாய்ப்புக்குத் தேவையான திறமையையும் பெற முடியாத சூழல் உருவாகிறது.


இது ஒருபுறம் இருந்தாலும், வேலை வாய்ப்பு என்பது நிறைய மாண வர்கள் ஒரே துறையைத் தேர்ந்தெடுக் கும்போது குறைகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், மாணவர்க ளிடத்தில் மருத்துவம், பொறியியல், வணிகவியல் மட்டுமல்லாது பிற துறைகளிலும் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளையும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வைப் பள்ளிகள், ஒரு மாணவர் 10ஆம் வகுப்பு படிக்கும் போதே ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் இதைச் செய்யத் தவறும்பட்சத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில் எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்படிச்சேர்க்கும்போது, அனைத்துத் துறை களிலும் இருக்கும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து அவர்களுக்குப் பிடித்தமான துறை யைத்தேர்ந்தெடுத்துப் படித்து, வெற்றியாளர்களாக வலம்வரு வார்கள். பிடித்ததைப் படிக்கும்போது, படிப்பதிலும் மாணவர்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.

விருப்பப் பாடம்: தங்களது பிள்ளைகளுக்கு ஈடுபாடும் விருப்பமும் உள்ள துறையில் மேற்படிப்பைப் பயில பெற்றோர் அனுமதிக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பங்களைச் சமூகத்திற்காக அவர்களிடம் திணிக்கக் கூாது. உங்கள் குழந்தைகளின் திறமையைக் கண்டறிந்து, ஊக்குவித்து, அன்பை மட்டுமே அவர்களிடத்தில் காட்ட வேண்டுமே தவிர, உங்கள் எண்ணங் களையும் விருப்பங்களையும் அல்ல. ஏனென்றால் குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கக் கூடாது.


எடுத்துக்காட்டாக, விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு மாணவர், மத்திய அரசின் தேசிய விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்து படிக்கும்போது, படித்து முடித்தபின் மிகச் சிறந்த வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் பெற முடியும். இந்தக் கல்லூரியில் சேர நல்ல உடலமைப்பும் ஏதோ ஒரு விளையாட்டில் திறமையுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போது மானது.


இதேபோல் சமையல் கலையில் விருப்பமுள்ள மாணவர், மத்திய அரசின் இந்திய சமையல் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது மத்திய அரசின்கீழ் இயங்கும் ரயில்வே, ராணுவம், விமானப்படை போன்ற வற்றில் சமையல் பிரிவில் வேலை வாய்ப்பு பெறமுடியும். இந்தக் கல்லூரியில் உலகளவில் விரும்பி உண்ணக்கூடிய பிற நாட்டுச் சமையல் கலையையும் கற்றுத் தருவதால் வெளிநாடுகளிலும் பன்னாட்டுக் கப்பல் களிலும் மிக உயர்ந்த சம்பளத்துக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.


இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், துறை யைத் தேர்ந்தெடுப்பது மட்டும் முக்கிய மல்ல, அந்தத் துறையில் மிகச்சிறந்த கல்லூரிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


உதாரணமாக, கூகுள் நிறுவனத் தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை படிக்கும் போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைப்படிக்கவில்லை. கூகுள் சி.இ.ஓ. ஆக வேண்டும் என்று படிக்கவில்லை. ஆனால், நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று உழைத்து, ஐஐடி கரக்பூரில் கிடைத்த துறையைப் படித்தார் (மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங்).



ஐஐடி-இல் படித்ததனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு எளிமையாகக் கிடைத்தது. அங்கும் சென்று கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவில்லை. மெட்டீரியல் சயின்ஸ் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்று மேலாண்மைப் படிப்பை மெக்கென்ஸி பல்கலைக்கழகத்தில் முடித்து, கூகுள் நிறுவனத்தில் 2004இல் சேர்ந்து, 2015இல் சி.இ.ஓ. ஆகப் பதவியேற்றார். எனவே மாணவர்கள் சிறந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

* வேளாண்மை (Agriculture) கட்டடக் கலை (Architecture) * ராணுவம் - பாதுகாப்பு (Army & Defence) * உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology) * வர்த்தகம் (Commerce) * சமையல்கலை (Culinary Arts) * பால்வளத்துறை (Dairy Technology) * வடிவமைப்பு (Design) * பொருளாதாரம் (Economics), பொறியியல் (Engineering) * உடை அமைப்பு (Fashion) * மீன்வளத்துறை (Fishery Science) * உணவுத் தொழில்நுட்பம் (Food Technology) அயல் மொழிகள் (Foreign Languages) * செவித்திறன் குறைபாடு (Hearing Impaired) உணவு விடுதி மேலாண்மை (Hotel Management) * மானுடவியல் புலம் (Humanities)

* இந்திய மருத்துவம் (Indian Medicine) * சட்டம் (Law) மேலாண்மை (Management) * ஊடகம் (Media) கடற்படை (Marine) * Medicine (மருத்துவம்) * கப்பல் துறை (Nautical Science) * செவிலியர் (Nursing) * துணை மருத்துவம் (Para Medical) * உடற்கல்வி (Physical Education) * விமானி (Pilot) * ஆராய்ச்சி (Research) * அறிவியல் (Science) * சமூக அறிவியல் (Social Science) * ஆசிரியர் பயிற்சி (Teacher Training) * கால்நடை அறிவியல் (Veterinary Science) போன்ற துறைகளில் இருக்கும் வாய்ப்புகளையும் அதைப் படிப்பதற்கான சிறந்த கல்லூரிகள் நடத்தும் 70க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளையும் தெரிந்துகொண்டு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் தலைசிறந்த கல்லூரியில் கல்வியைப் பெற்று, வெற்றியாளர்களாகத் திகழ வாழ்த்துகள்!


நன்றி.

இந்து தமிழ் திசை.


🙏





04/11/2025

TN SSLC/HSE Public Exam Time Table March -2026

💢💢💢💢💢💢




 

💢💢💢💢💢💢





💢💢💢💢💢💢




All The Best

💢💢💢💢💢💢

🔰🔰🔰🔰

🙏





01/11/2025

JEE(MAIN)-2026 REGISTRATION OPEN NOW. LAST DATE : Today (27-11-2025) ,9P.M - EXAM DATE : 21-1-2026 TO 30-1-2026



💢💢💢💢💢💢💢💢💢💢💢💢



💢💢💢💢💢💢💢💢💢💢💢💢





💢💢💢💢💢💢💢💢💢💢💢💢





💢💢💢💢💢💢💢💢💢💢💢💢



💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

















EXAMINATION CENTRES IN TAMILNADU




SYLLABUS👉CLICK HERE

INFORMATION BULLETIN👉CLICK HERE



ONLINE APPLICATION AND MOR DETAILS

👇

CLICK HERE

https://jeemain.nta.nic.in


ALL THE BEST 


🙏