
Last date to apply June 8, 2026.
👉TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY Undergraduate Admissions
👉ANNAMALAI UNIVERSITY Undergraduate Admissions
பொறுப்பும் கடமையும்

Last date to apply June 8, 2026.
👉TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY Undergraduate Admissions
💢💢💢
Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2026 (TNGASA 2026) is an online process that includes registration, payments, choice filling, and printing application. https://www.tngasa.in/ is a unified portal that can be used to apply for one or more colleges among the 181 Government Arts and Science Colleges in Tamil Nadu. Candidates are requested to thoroughly read the instructions provided here for the successful completion of their counseling and admissions.
The application and registration fee is Rs 2/- for SC/SCA/ST category students and Rs. 50/- for students in other categories.
| 07-05-2026 | Commencement of Online application Form submission (இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்) |
| 29-05-2026 | Last Date of Submitting the online Application Form (இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள்) |
TNGASA BOOKLET👉CLICK HERE
REQUIRED DOCUMENTS👉CLICK HERE
ADMISSION FACILIATION CENTERS👉CLICK HERE
INSTRUCTION IN TAMIL 👉CLICK HERE
ONLINE APPLICATION PORTAL
👇
👆
ALL THE BEST
🙏
The National Testing Agency (NTA) has officially released the admit cards for the CUET UG 2026 entrance exam today, May 5, 2026. Candidates scheduled for exams between May 11 and May 31, 2026, can now download their hall tickets from the official portal.
👇
👆
🙏🏼
Official admission
Portal
for Government Polytechnics
for the Academic Year 2026–2027
OPEN
FIRST YEAR
LATERAL ENTRY
PART TIME
🙏🏼
UG COURSES OFFERED IN MCC,LAST DATE 31/5/2025.
ONLINE APPLICATION 👉https://mcc.edu.in/admission-2026-2027/
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கு மே மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தின் இயக்குநரும், தொழிலாளர் நலத் துறையின் கூடுதல் ஆணையருமான ஜி.சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர், மின்வாரிய சாலை, மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது.
இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ.(தொழிலாளர் நிர்வாகம்) (மாலை நேரப் படிப்பு), டிஎல்ஏ (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) (வார இறுதி) படிப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும், பட்டதாரிகள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும் முதுகலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளிலும் சேரலாம்.
இந்நிலையத்தில் தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இருக்கிறது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை தபாலில் பெற, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தபால் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுக்கான வங்கி வரைவோலையை ‘The Director, Tamilnadu Institute ofLabour Studies, Chennai’ என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிய மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்களான எம்.காமராஜ் (ஆராய்ச்சி அலுவலர் - மொபைல் எண்: 8667754203)), எஸ்.கார்த்திகேயன் (உதவிப் பேராசிரியர், மொபைல் எண்: 9965899822) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🎯
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
👉https://results.digilocker.gov.in🎯
Whatup- ல் அறிய 📞 7845252525 எண்ணிற்கு
Hi
என அனுப்பி
தேர்வு எண் & DOB பதிவிட்டு அறியலாம்.
🙏🏼
பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 1.70 லட்சம் இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
மாணவர் சேர்க்கைப்பணிகளை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்கிறது. இந்நிலையில், வரும் 2026-27-ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 3 (நேற்று) முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறும். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப நடைமுறை, கால அட்டவணை, சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை (ஒலி - ஒளி வாயிலாக), கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள், பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் சேருவதற்கான சான்றிதழ் மாதிரிகள் உள்ளிட்ட தகவல்களும் இணையதளத்தில் உள்ளன.
விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இணையதள வசதி இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள்(TFC) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரி, தொடர்பு எண்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-0110 என்ற எண்ணில் இந்த மையத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙏
ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்நிலை பணியின்கீழ் வரும் மீன்வள ஆய்வாளர் (Inspector of Fisheries) பதவியானது நேரடி நியமன முறையிலும் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. நேரடி நியமனத்துக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான கல்வித் தகுதி மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பிஎப்எஸ்சி) அல்லது எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி கடல்வாழ் உயிரியல் (மரைன் பயாலஜி), எம்எஸ்சி கடலோர மீன்வளர்ப்பு - இவற்றில் ஏதேனும் ஒரு படிப்பு அவசியம். எனினும் பிஎப்எஸ்சி பட்டதாரிகளுக்கே பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எம்எஸ்சி பட்டதாரிகள் மீன்வள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும் தகுதியான பிஎப்எஸ்சி பட்டதாரிகள் இல்லாவிட்டால் மட்டுமே அவர்கள் பரிசீலிக்கப்படுவர். ஆரம்ப காலத்தில் மீன்வள ஆய்வாளர் பதவிக்கான நேரடி நியமனத்தில் குறிப்பிட்ட சதவீத இடங்கள் பிஎப்எஸ்சி பட்டதாரிகளுக்கும் எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நியமனம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தற்போது மீன்வள ஆய்வாளர் பதவிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் பிஎப்எஸ்சி பட்டதாரிகள் மட்டுமே நேரடி மீன்வள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.
பணியிடங்கள் விவரம்:
1. தலைமைக் காவலர் (கண்காணிப்பாளர்): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கேட்டரிங் மற்றும் கிச்சன் மேனேஜ்மென்ட் படிப்பில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்து ஒரு வருட ‘கண்காணிப்பு’ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,
2. தலைமைக் காவலர் (கம்யூனிகேஷன்): 197 இடங்கள் (பொது-87, பொருளாதார பிற்பட்டோர்-18, ஒபிசி-55, எஸ்சி-20, எஸ்டி-17). வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
3. தலைமைக் காவலர் (எலக்ட்ரீசியன்): 29 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-5, எஸ்டி-2). வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ படித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. தலைமைக் காவலர் (கால்நடை பிரிவு): 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-2). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 20 முதல் 27க்குள். தகுதி: உயிரியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கால்நடை மற்றும் கால்நடை தீவன மேம்பாடு அல்லது விலங்கியல் பாதுகாப்பு பாடத்தில் 2 வருட டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ‘ஸ்டெவர்டு’ (கண்காணிப்பாளர்) பணிக்கு ஆண்கள் 165 செ.மீ., உயரமும், பெண்கள் 155 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 60 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும்.
இதர பணிகளுக்கு: ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும்.
உடற்திறன்: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களிலும் ஓடிக் கடக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.
II. அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்பி)
i) ரேடியோகிராபர்: 3 இடங்கள்.
ii) பார்மசிஸ்ட்: 2 இடங்கள்.
iii) ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன்: 1 இடம்.
iv) டென்டல் டெக்னீசியன்: 1.
மேற்குறிப்பிட்ட பணிக்கான வயது: 20.04.2026
தேதியின்படி 18 லிருந்து 27க்குள்.
சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி/ரேடியோகிராபி/பார்மசி/ ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி/ டென்டல் ஹைஜினிஸ்ட் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பெட்/பிஎஸ்டி/சிபிடி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.
🙏