22/05/2025
20/05/2025
2025 கல்லூரி கனவு புத்தகம்-சிறந்த வழிகாட்டி.
18/05/2025
அரசு கவின்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் இசைக் கல்லூரி சேர்க்கை. அறிவிப்பு
தமிழ்நாடு அரசு
கலைபண்பாட்டுத் துறை
அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம்/மதுரை
(Last Date : 30/6/2025)
அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம்
(Last Date : 30/6/2025)
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
(சென்னை,மதுரை, கோயம்பத்தூர் & திருவையாறு)
(Last Date : 26-5-2025
(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு.)
மாணவர் சேர்க்கை அறிவிப்பு
More info and Online Application portal
👇
https://artandculture.tn.gov.in/music-and-fine-arts-university
🙏🏼
16/05/2025
D.El.Ed மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித் துறை அனுமதி
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (D.El.Ed) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: தமிழகத்தில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 25 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதையேற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை இணையவழியில் ஜூன் 6ம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், சாதி வாரியாக மாணவர்கள் ஜூன் 14-ம் தேதி தேர்வு செய்யப் படுவார்கள். அதன்பின் வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப் படும். பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும். இது தவிர நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல், நடப்பாண்டு டிடெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அதற்காக முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப் படும். அதற்கேற்ப கல்வியாண்டு ஜூன் முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
15/05/2025
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு M.A தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு. கடைசி நாள் ; 16-6-2025
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு ((Five Years Integrated Post Graduate M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இப்படிப்பில் வரும் கல்வி ஆண்டுக்கான (2025-2026) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தையும் விளக்கவுரையையும்
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இக்கல்வி நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதி உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113" என்ற முகவரியில் ஜூன் 16-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய 044 - 22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எது சிறந்த பொறியியல் கல்லூரி எப்படி தேர்ந்தெடுப்பது?.
🔰🔰🔰🔰🔰
பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
மாணவர்களுக்குச் சில யோசனைகள்:
🎯பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலையும் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பது குறித்த விருப்ப வரிசையையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
🎯 டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.
🎯அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருக்கும். அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை டியூஷன் ஃபீஸ் தவிர, மற்ற கட்டணங்கள் எவ்வளவு என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது.
🎯அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள கையேடு, நாம் சேர விரும்பும் கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்த்தும் சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
🎯ஏற்கெனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் கல்லூரிகளிலும் முதுநிலைப் படிப்புகள் உள்ள கல்லூரி களிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்கும் என நம்பலாம். ஆனால், பல ஆண்டுகளாக உள்ள கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கக் கூடும் என்பதையும் புதிய கல்லூரிகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
🎯பொறியியல் கல்லூரிகள் குறித்துப் பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிவிடக் கூடாது. பிரம்மாண்டமான கட்டிடங்கள் இருப்பதால் மட்டுமே அது சிறந்த கல்வி நிறுவனம் ஆகிவிடாது. அங்கு ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
🎯மிக முக்கியமாக அக்கல்லூரியில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக் கிறார்களா என்பதையும், கல்லூரிகளில் பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர் களின் வேலை வாய்ப்புக்கு உதவும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
🎯தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு, அக்கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதுடன், அக்கல்லூரியில் படித்துவரும் மாணவர்களிடம் அக்கல்லூரியின் நிறைகுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று பார்ப்பது சாத்தியமல்ல என்றாலும் விருப்பப் பட்டியலில் உள்ள சில கல்லூரிகளுக்காவது நேரடியாகச் சென்று பார்க்கலாம்.
🎯நாம் சேர விரும்பும் கல்லூரியில் கடந்த ஆண்டு எத்தனை சதவீத இடங்கள் பூர்த்தியாகியுள்ளன என்பதையும், கல்லூரியில் மாணவர் தேர்ச்சி விகிதம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் பார்த்து சேர விரும்பும் கல்லூரிகளின் தரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
🎯சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்துதான் பிரபலமான தொழில் நிறுவனங்கள் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன. எனவே, நாம் சேர விரும்பும் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
🎯பொறியியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பாடப்பிரிவில் எந்தவிதமான பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன, அந்தப் படிப்பை சிரமமில்லாமல் படிக்க முடியுமா, அந்தப் படிப்பைப் படித்தால் எந்தெந்த வேலைகளுக்குப் போகலாம் என்பதை மாணவர்கள் முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது. இது பற்றி ஆசிரியர்களிடமும் சீனியர் மாணவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
🎯பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் ஏராளமான மாணவர்கள் போட்டிபோட்டு கொண்டு சேர்வார்கள். அந்தப் பாடப்பிரிவுதான் சிறந்தது என்றும் அந்தப் பாடப்பிரிவைப் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் நல்ல வேலை கிடைக்கும் என்றும் நினைக்க வேண்டாம். பொறியியல் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவைப் படித்தாலும் அதில் சிறப்பாகப் படிக்கிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
🎯மாணவர்களின் விருப்பத்துக்கு மாறான படிப்புகளில் சேரும்படி மாணவர்களைப் பெற்றோர் கட்டாயப் படுத்தக் கூடாது. ஆர்வமில்லாத படிப்பு களில் மாணவர்கள் சேரும்போது, அந்தப் படிப்பே சில நேரம் மாணவர்களுக்கு சுமையாகிவிடக்கூடும்.
🎯மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஆர்வம், திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் சேர்வது என்பதைப் பெற்றோரும் மாணவரும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
நன்றி.
இந்து தமிழ் இசை.
🙏🏼
Brakes India - TN Govt இணைந்து வழங்கும் வேலை வாய்ப்புடன் கூடிய Diploma Course.
பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளைத் தொடங்குவதற்காக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது .
அதன்படி பாடநெறி இலவசமாக நடத்தப்படுகிறது மற்றும் மாதந்தோறும் ₹12,500 உதவித்தொகையும் இதில் அடங்கும், இது கற்றல் மற்றும் நிதி உதவி இரண்டையும் உறுதி செய்கிறது.
தொழில்துறை பராமரிப்பு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா இந்த திட்டங்கள் எங்கள் பிரேக்ஸ் இந்தியா தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும், இது மாணவர்களுக்கு தொழில்துறை தொடர்பான திறன்களை வழங்கும். மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. கோவி செழியன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை தயார்நிலைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.14/05/2025
10,11 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை
👇
https://results.digilocker.gov.in,
👆
ஆகிய இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
🙏🏼
11/05/2025
THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY & Affiliated Law Colleges Admission, Last Date : 31-5-2025
Last Date : 31-05-2025
💢💢💢
Applications are invited from eligible candidates through Online Mode for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2025-2026.
Online Application Forms and Prospectus are available in the University website.
👇
👆
🙏🏼
Dr. M.G.R தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்! கடைசி நாள்: 28/5/2025
தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பட்டப்படிப்பு வாய்ப்புகள். உங்கள் சினிமா பயணத்தைத் தொடங்குங்கள்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற நிறுவனம், திரைப்படத்துறையில் பல்வேறு பிரிவுகளில் நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, ஒளிப்பதிவு, திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், திரைப்படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இடைநிலை மற்றும் அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையும், மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த வாய்ப்பைப் பெறலாம்? அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல் மற்றும் கணிதவியல் பாடங்களில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குறிப்பாக, இயற்பியல், கணிதம் அல்லது மின்னணுவியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள்,
என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். பொதுப் பிரிவினருக்கு ,Rs.200/- என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு ₹60/- என்றும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.05.2025 பிற்பகல் 5.00 மணி ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Online Application Portal
👇
https://bankpg.com/tnmgrftins/
🙏🏼
10/05/2025
TNPSC-Combined Technical Services Examination (Interview Posts)- Last Date : 11-6-2025
ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை பிளஸ் 2 துணை தேர்வு : மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை பிளஸ் 2 துணை தேர்வு: மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வு துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙏
TNAU & AU (UG-AGRICULTURE ADMISSION)- LAST DATE- 8/6/2025
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
UGC-NET-Last Date Extended to 12/5/2025.
UGC NET June 2025: The National Testing Agency (NTA) has officially extended the last date for submission of the online application form for the University Grants Commission National Eligibility Test (UGC NET) June 2025.
The test is a key qualifying examination for teaching and research roles across Indian higher education institutions. It is conducted by NTA on behalf of the University Grants Commission (UGC), assessing candidates’ eligibility for research fellowships and academic positions
Candidates now have until May 12, 2025, 11:59 PM to complete their registration process on the official website,
👇
👆
This extension provides additional time for aspirants who may have faced challenges in gathering required documents or completing the application due to technical or personal reasons.
Applicants are advised to carefully review the eligibility criteria, ensure all details are correctly filled, and upload necessary documents before the deadline to avoid any last-minute issues.
The NTA has also revised the window for corrections in the submitted application forms. Applicants can make necessary changes to their details between May 14 and May 15, 2025, also up to 11:59 PM. The correction facility will be accessible through the same portal used for registration.
UGC NET June 2025: Who should apply and what to expect
UGC NET June 2025 is open to candidates aiming for three main academic and research pathways:
1.Award of Junior Research Fellowship and appointment as Assistant Professor
2.Appointment as Assistant Professor and admission to Ph.D.
3.Admission to Ph. D only.
More info and online portal
👇
https://ugcnetjun2025.ntaonline.in/
👆
🙏🏼
.
08/05/2025
07/05/2025
TN Engg. Admission - Registration Last Date : 06-06-2025
Tamil Nadu Engineering Admissions 2025 (TNEA 2025) is a complete online process includes Registration, Payments, Choice Filling, Allotment and Confirmation. Candidates are requested to read the instructions given here completely for the successful completion of their Counseling and Admissions. Please download instructions and read carefully before starting the online registration.