Search This Blog

05/05/2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். Last Date:19-5-2023

 



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில்‌ உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது. இதற்கு மாணவர்கள் https://tngasa.org/ மற்றும்  https://tngasa.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டண விவரம்‌


ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்‌:


விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.48/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 


எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் ‌கட்டணம்‌ எதுவும் இல்லை
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- மட்டும்‌ 


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ இணையதள வாயிலாகச் செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ மே 8 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகச் செலுத்தலாம்‌.


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ துவங்கும்‌ நாள்‌ - 08.08.2023


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்‌ - 19.06.2023


கூடுதல் தகவல்களுக்கு: தொடர்பு எண்‌ : 1800 426 0110

🔰🔰🔰🔰🔰

விண்ணப்பிக்க

👇


✅✅✅✅✅


📡⚖️🧬🔭🔬🛰🚀

👆

🙏


get app pic 




621 காலியிடங்கள்: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பதவிக்கு நேரடி தேர்வு, கடைசி நாள்:30-6-2023



621 காலியிடங்கள்: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பதவிக்கு நேரடி தேர்வு

⚖️⚖️⚖️⚖️⚖️

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 2023 நேரடி தேர்விற்க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



👮👮👮👮👮

TNUSRB SI Recruitment 2023 Tamil News: காவல்துறை வேலை என்பது பலருக்கு கனவு. இதற்காக வருடகணக்கில், தங்களின் உடல்திறனையும், அறிவுத்திறனையும் வளர்த்து வருவோர் அதிகம். இந்தநிலையில், தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

தகுதி உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள்  https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📣📣📣📣📣📣📣

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளன.

✴️✴️✴️✴️✴️

  1. கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

🔰🔰🔰🔰🔰

  1. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வும் வழங்கப்பட்டு உள்ளது

✅✅✅✅

  1. தேர்வுக் கட்டணம்

தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்’ என்று கூறியுள்ளது.

📈📈📈📈📈

4.காலியிட விவரங்கள்:

காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா): 366 பணியிடங்கள்
சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஆர்): 145 பதவிகள்
காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி ): 110 பணியிடங்கள்

இதுகுறித்து மேலும் அறிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணைய பக்கத்தை https://www.tnusrb.tn.gov.in/ta/sitaluk-tnusrb-ta.php -என்ற லிங்க்-கில் பார்க்கவும்.



Click here

👇

https://tnusrb.tn.gov.in

👆

All the Best.

🙏




04/05/2023

TN - B.E / B.Tech / B.Arch படிப்பிற்கு விண்ணப்ப பதிவு 5/5/2023 துவங்குகிறது


TN - B.E / B.Tech / B.Arch படிப்பிற்கு

 விண்ணப்பபதிவு

 5/5/2023 துவங்கி

 4/6/2023 முடிவுறுகிறது

 

இன்று

செயலாளர்,

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை

வெளியிட்ட செய்தி

📡📡📡📡📡📡📡📡


 முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் /அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📡🛠🔧⚙️🔭🔬🖇📐📝🧬

1) விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்யவேண்டும். 

🛰🛰🛰🛰🛰

2) இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFC8) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்

துவங்கும் நாள்: 05.05.2023 முடிவுறும் நாள்: 04.06.2023 

🚀🚀🚀🚀🚀

3) பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், "The Secretary TNEA" payable at Chennal. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.



📈📈📈📈📈

4) கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.

💢💢💢💢💢

5) மாணக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக

சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.

✅✅✅✅✅

6) B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

📣📣📣📣📣

தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015


அழைப்பு எண்: 1800 - 425 - 0110


Emall theacare@gmail.com


செயலாளர்,


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


விண்ணப்பம் பதிவு செய்ய

சொடுக்கவும்

🖱

👇

https://www.tneaonline.org

📡

https://www.tndte.gov.in

🔭


🔰🔰🔰🔰🔰🔰🔰

✴️✴️✴️

🙏

NEET(UG-2023)Admit Card Released-Download Now


🔰🔰🔰🔰🔰🔰🔰


Download
Hall ticket
✅✅✅✅✅
👇
Click Here



🩺🩺🩺🩺

All the Best

🙏

02/05/2023

RTE Act-2008 தனியார் பள்ளிகளில் 2023–2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

 RTE சட்டம் 2008 தனியார் பள்ளிகளில் 2023–2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.





மாணவர் சேர்க்கைக்கு 20.04.2023 முதல் 18.05.2023 வரை 

rte.tnschools.gov.in ல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க 

Click

👇

rte.tnschools.gov.in


🙏


 

30/04/2023

ISRO-Online Applications for the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A and Technician-B/Draughtsman-B are open.




 ISRO

🚀

🚀🚀

🚀🚀🚀

Online Applications 

for 

the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A 

and 

Technician-B/Draughtsman-B 

are 

open

✴️

For More Details

👇

Click Here


🔰🔰🔰🔰🔰🔰


காலி இடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டாம். இது உங்களுக்கான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💢💢💢💢💢

முயல்வோரே முன்னேறுவர்

📣📣📣

நன்றி.

🙏


26/04/2023

2022_2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியானது.



2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

👇

Click here


📣இந்த கல்வியாண்டில் (2022-23) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் (Minimum one year service in present station) என்ற நிபந்தனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

👍👍👍👍👍



✴️✴️✴️


🙏












இன்று +2 Result .



+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8,காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


தேர்வு முடிவு அறிய

Click Here

👇

www.tnresults.nic.in

💢💢💢💢💢

www.dge1.tn.nic.in

✅✅✅✅✅

www.dge2.tn.nic.in

✴️✴️✴️✴️✴️

www.dge.tn.gov.in


Dircet link

👇

http://www.tnresults.nic.in/tpexter.htm


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


🙏


All the Best



14/04/2023

NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு

 NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு.





🙏


09/04/2023

திருநெல்வேலி மாவட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை 2022-2023

 பள்ளிக் கல்வித் துறை திருநெல்வேலி மாவட்டம்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 

ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை: 2022-2023




TN 6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை


6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை 


தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


தேர்வு அட்டவணை 

21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ் 

24 ஆம் தேதி ஆங்கிலம் 

25 ஆம் தேதி கணிதம் 

26 ஆம் தேதி அறிவியல் 

27 ஆம் தேதி உடற்கல்வி 

28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது



✅✅✅✅✅✅✅✅✅✅✅✅



தேர்வு நேரம்

6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி 

7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை 

8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி 

9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


✴️✴️✴️✴️✴️

🙏




30/03/2023

காலநிலை மாற்றம்: மனிதத் துயரங்களின் வரைபடம்




காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC) 58ஆவது மாநாடு, சுவிட்சர்லாந்தின் இண்டர்லேகன் நகரத்தில் மார்ச் 19 அன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில் பன்னாட்டுக் குழுவின் ஆறாவது காலநிலை அறிக்கையின் (Sixth Assessment Report) நான்காவதும் இறுதியுமான பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘காலநிலை மாற்றத்தின் அறிவியல்’, ‘காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும்’, ‘காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்’ என்ற மூன்று தலைப்புகளில் முந்தைய அறிக்கைகளை 782 விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த மூன்று அறிக்கைகளின் ஒருங்கிணைந்த கருத்துகள், முடிவுரை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்துறை அறிவியலாளர்களும் நிபுணர்களும் இணைந்து தயாரித்திருப்பது இதன் சிறப்பம்சம். முந்தைய அறிக்கைகளின் ஒருங்கிணைந்த வடிவம் என்றாலும், இதில் சில கூடுதலான கணிப்புகளும் தெளிவான வழிமுறைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2023 நவம்பரில் துபாயில் நடக்கவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டுக்கு (COP28) இந்த அறிக்கையின் தரவுகளே அடிப்படையாக அமையும் என்பதால், இதன் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

வெப்பம் அதிகரிக்கும்: கரிம உமிழ்வு இப்போதைய நிலையிலேயே தொடரும்பட்சத்தில், 2040ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டுவதற்கு 50% வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். இது இன்னும் விரைவாக - அதாவது 2037க்குள்ளாகவே நிகழலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல உலகளாவிய ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படுத்தப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது. காலநிலை மாற்றம் பற்றிய தங்களது ஆவணங்களில், அதை எப்படிச் சமாளிப்பது என்கிற வழிமுறைகளையும் உலக நாடுகள் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றன.

இதை வரவேற்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், இந்த வழிமுறைகள் ஒழுங்கமைவுடன் இல்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர். பல்வேறு துறைகளின் ஊடுபாவாக இந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, தொடர் செயல்பாடுகளாக அவை பரந்துபட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறைகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, இவற்றின் செலவு குறைந்திருப்பதாகவும், இவற்றின் பயன்பாட்டு விகிதம் அதிகரித்திருப்பதாகவும் காலநிலை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அனைவருக்கும் கொண்டுசெல்ல இன்னும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். நகர்ப்புறப் பசுமை உள்கட்டமைப்பு, ஆற்றல் செயல்திறன், உணவு வீணாவதைக் குறைப்பது, பயிர் மேலாண்மை ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கும் விஞ்ஞானிகள்: காலநிலை மாற்றத்தின் நீண்ட காலப் பாதிப்பு, இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதைவிடப் பல மடங்கு மோசமானதாக இருக்கலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, பாதிப்புகளின் விகிதம் ஒரு பெருக்கல் தொடரைப் போல (Geometric Progression) அதிகரிக்கும் என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு டிகிரி அதிகரித்தால் 10 மடங்கு பாதிப்பு என்றால், இரண்டு டிகிரி அதிகரித்தால் 20 மடங்கு என பாதிப்புகளை ஒரே நேர்க்கோட்டில் அணுக முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நிதிச் சிக்கல்: காலநிலைச் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கான மூன்று முக்கியத் தேவைகளாக நிதி, தொழில்நுட்பம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. சர்வதேச ஒத்துழைப்பு இருக்குமா, ஒருவேளை இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையே நிதிதான் தீர்மானிக்கிறது.

பெரும்பாலான காலநிலை மாநாடுகளில் நிதி தொடர்பான விவாதங்களில்தான் அதிகமான முரண்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, வளங்குன்றாச் செயல்பாடுகளுக்கான தொழில்நுட்பம், கரிம உறிஞ்சு தொழில்நுட்பம் என்று பலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலும் நிதி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆகவே, வேறு எல்லாவற்றையும்விட காலநிலைச் செயல்பாடுகளுக்கு நிதி ஒரு முதன்மையான தடைக்கல்லாக இருந்துவருகிறது.

வளர்ந்த நாடுகள் நிதியளிப்புக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதில்லை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் குற்றச்சாட்டு; அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. யாருக்கு யார் நிதி வழங்குவது என்ற விவாதமே பெரும்பாலான காலநிலை மாநாடுகளின் ஒப்பந்தத்தைச் சீர்குலைத்துவிடுகிறது.

தயார் நிலை அவசியம்: காலநிலை மாற்றத்தால் வரும் பேரிடர்களைச் சமாளிக்க, சூழலியல் மண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட தகவமைப்புகளை (Ecosystem based adaptation) இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. உதாரணமாக, நிலச்சரிவுகளைக் குறைக்க காடழிப்பைத் தடுப்பது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதன் மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, கடல்நீர் உட்புகுதல், கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் பாதிப்பு ஆகியவற்றைத் தடுக்க அலையாத்திக் காடுகளை மீட்டெடுப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் குறிப்பிடலாம்.

இவை தவிர, ஒரு சில பேரிடர்களுக்கு எந்தத் தகவமைப்புமே உதவாது என்று இந்த அறிக்கை வெளிப்படையாகவே அறிவிக்கிறது. அந்தந்த நாடுகள் இவற்றுக்கான தயார் நிலையில் இருக்க வேண்டியதும் அவசியம்.

காலநிலை ஒப்பந்தங்களின்போது அறிவிக்கப்படும் சில வாக்குறுதிகளை உண்மையாகவே நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் முனைப்பாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. கரிமத் தொழில்நுட்பங்கள் பற்றி இதில் அதிகமாகப் பேசப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

உமிழ்வுகளை எவ்வளவு குறைத்தாலும் ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுக்களைச் சமாளிக்க கரிமத் தொழில்நுட்பம்தான் ஒரே வழி என்பது உண்மையே. ஆனால், எண்ணெய் நிறுவனங்களின் தொடர்ந்த ‘லாபி’ காரணமாக, புதைபடிவ எரிபொருள்களின்மீது வெளிச்சம்படாமல் இருப்பதற்காக இந்தத் தொழில்நுட்பம் முன்னிறுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

‘துயரங்களின் வரைபடம்’: உலகின் வெவ்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், வெவ்வேறு தலைமுறையினர் காலநிலை அவசரநிலையால் சந்திக்கப்போகும் அழிவுகள் ஆகியவை படங்களாக இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை, ‘மனிதத் துயரங்களின் வரைபடம்’ என்று வர்ணிக்கும் ஐநா பொதுச்செயலாளர்அன்டோணியோ குட்டர்ஸ், “எல்லா இடங்களில்இருப்பவர்களும் ஒருசேர, எல்லா விதமான காலநிலை செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுவேஇந்த அறிக்கையை செயல்பாடுத்துவதற்கான அறைகூவல்” என்று தெரிவித்திருக்கிறார்.

காலநிலை மாற்றத்தின் தீவிரம் முன்னெப்போதையும்விட அதிகமாகியிருக்கிறது. உலகம் தொடர் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது. சிறிய முரண்களால் வேறுபடாமல் மனித இனத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று இந்த அறிக்கை தெளிவாக வலியுறுத்துகிறது. அதற்குக் காதுகொடுப்பதா வேண்டாமா என்பது உலக நாடுகளின் கையில்தான் இருக்கிறது.

- நாராயணி சுப்ரமணியன் | சுற்றுச்சூழல் எழுத்தாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

நன்றி

இந்து தமிழ் திசை

28/3/2023.

12/03/2023

Extending the Registration for online Application for CUET (UG)- 2023.

 Extending the Registration

 Online Application Forms 

 Common University Entrance Test

 [CUET (UG)] - 2023 Examination.


Last Date:30/3/2023


🙏

06/03/2023

NEET(UG)-2023 Announced,Last Date: 06-04-2023

💉💉💉💉💉💉


🩺🩺🩺🩺🩺🩺🩺


💊💊💊💊💊💊💊


 More Details and Online Application

👇

Click Here


All The Best


,🙏