Search This Blog

07/07/2022

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம். Last Date: 8/8/2022


மீன்வளப் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா பெயரில் அழைக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமைந்துள்ளன. 11 கல்லூரிகளும் 47 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 600 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,500 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc)
இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc) மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.

அவை முறையே,

பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (FITT) சென்னை ஆகும்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதோடு மீன்வளத் துறையின் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க பல தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இப்பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும்

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வளப் படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம்.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா ன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மீன்வளப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க http://tnjfu.ac.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் 04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Apply online 👉 http://tnjfu.ac.in



🙏



அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 62 சதவீத மாணவர்கள் தோல்வி

 


அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 38 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.

06/07/2022

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


 

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

 மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்

🔰🔰🔰🔰🔰


🙏



04/07/2022

Apply M. E / M.Tech Admission . Last Date:3/8/2022.

 


சென்னை: எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது குறித்து அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்இ, எம்டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும், எம்.ஆர்க் முதுநிலை படிப்புக்குமான தமிழ்நாடு பொது நுழைவு சேர்க்கை (TANCA) நடத்தப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பதிவு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக வருகிற ஆக.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ''The Director (Admissions), Anna University, Chennai 600 025'' என்ற முகவரிக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ''The Principal, Government College of Technology, Thadagam Road, Coimbatore 641 013'' என்ற முகவரிக்கும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

2022 டான்செட் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில் தொடர்புடைய பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில் தொடர்புடைய பொறியியல்/ வாழ்க்கை அறிவியல் துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

👉 Apply online


Last Date: 3/8/2022


TN-TRB RELEASE PGTRB:2021-2022 EXAMINATION RESULT WITH FINAL KEY.



    Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I -2020-2021

 RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY


To download the result follow the steps given below:-

              Step 1 – Click Login

              Step 2 – Enter User ID and password

              Step 3 – Click Dashboard

              Step 4 – Click here to download score card

             Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

              Date: 04.07.2022



Click here for result



Click here for Final key


🙏











நவோதயா பள்ளிகளில் 1616 காலிப்பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22/7/2022.

 


இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்கும் விதமாக மத்திய அரசினால் நவோதயா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது ஒவியம், இசை, நூலகர், உடற்கல்வி போன்ற துறைகளில் பணியாற்ற ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 1616 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நவோதயா பள்ளியில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 1,616

துறை ரீதியான காலிப்பணியிட விபரங்கள்:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்683
முதுகலை பட்டதாரி ஆசிரியர்397
இதர ஆசிரியர்கள்181
பள்ளி முதல்வர்12

Notification👉Click Here


வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம்.!

 


சென்னை: வணிகவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் டி.காம். (Diploma in Commercial Practice) பட்டயப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று பேராசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சூடுபிடித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக பி.காம். படிப்புக்கான மவுசு உயர்ந்து வருவதால் அதில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் வணிகவியல் பாடமே முன்னிலை வகிக்கிறது.

இதன் காரணமாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குகூட பள்ளி, கல்லூரிகளில் வணிகவியல் பாடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது பி.காம். படிப்பை குறிவைத்து படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில வணிகக்கல்வி பயிலகத்தின் முதல்வர் கா.முத்துக்குமார் கூறியதாவது: பிளஸ்-2 முடித்த 2 லட்சம் மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர விரும்புகின்றனர். ஏனெனில், பி.காம். முடித்தவர்களுக்கு எளிதில் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

எனினும், அதிகளவில் சேர்க்கை இடங்கள் இல்லாததால் பலர் விருப்பம் இருந்தும் வேறு படிப்புகளை தேர்வுசெய்ய வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய பி.காம். படிப்பில் எளிதாக சேர தற்போது டி.காம். பட்டயக் கல்வி வழிவகை செய்கிறது.

தமிழகத்தில் டி.காம். பட்டய படிப்பு 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுத் தரப்படுகிறது. பி.காம். படிப்பின் பாடங்களை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சி (டேலி, டிடிபி) ஆகியவையும் இதனுடன் சேர்த்து பயிற்றுவிக்கப்படுவதால் அரசு, தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் டி.காம்.

முடித்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. டி.காம். படித்த 80 சதவீதம் பேர் தற்போது நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அதேபோல், டி.காம். படிக்கும் மாணவர்கள் பெறும் பட்டய சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உட்பட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும்.

மிக முக்கியமாக ஆண்டு கல்லூரி கட்டணம் ரூ.2500 தான் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிக்கல் இருக்காது. மேலும், அரசு நலத்திட்டங்கள், உதவித் தொகைகள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதுதவிர மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பினால் தங்களுக்குப் பிடித்த கல்லூரியில் பி.காம். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.

இதற்காக அனைத்துவித கல்லூரிகளிலும் பி.காம். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு கூடுதலாக 10 சதவீதம் இடங்கள் ஏற்படுத்திக்கொள்ள உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த டி.காம். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி 2-ம் ஆண்டு சேர பிளஸ்-2 வணிகவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த படிப்பு தமிழகத்தில் சென்னை மாநில வணிகக் கல்விப் பயிலகம் (இருபாலர்), தர்மாம்பாள் அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஊட்டியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) மற்றும் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) ஆகியவற்றில் உள்ளது.

மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 




03/07/2022

PART TIME B.E. ADMISSIONS 2022-2023, Registration Starts:4/7/2022, Last Date 3/8/2022


 PART TIME B.E. ADMISSIONS 2022-2023,

 Registration Starts:4/7/2022, 

Last Date 3/8/2022


சென்னை: பகுதி நேர பி.இ பட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்களாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அவை முறையே அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 013, அரசினர் பொறியியற் கல்லூரி சேலம் - 636 011, அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி - 627 007, அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, காரைக்குடி - 630 004, தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் - 632 002, அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் - 635 104, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் - 641 014, தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை - 625 015 ஆகும். இதற்கான தகுதி, விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.    

விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இதற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் நாளை (04.07.2022)  துவங்குகிறது. முடிவுறும் நாள் 3.8.2022 ஆகும். மேலும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (டிஎப்சி) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து டிஎப்சி மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.  மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 0422-2590080, 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.. 


Apply online👉 www.ptbe-tnea.com

10 STD, MINIMUM LEARNING STUDY MATERIAL / SLOW LEARNERS STUDY MATERIAL, ALL SUBJECTS.

👇


Click Here


🔰🔰🔰🔰🔰🔰🔰



🙏




30/06/2022

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY Regular Admission open. Last date:10-7-2022

 TAMIL NADU 

PHYSICAL EDUCATION

 AND 

SPORTS UNIVERSITY

 Regular Admission Open.

 Last date:10-7-2022

For More Details

👇

https://www.tnpesu.org/




COMMON RECRUITMENT FOR THE POSTS OF GR.II POLICE CONSTABLE, GR.II JAIL WARDER AND FIREMEN-3552

 


COMMON RECRUITMENT FOR THE POSTS OF GR.II POLICE CONSTABLE, GR.II JAIL WARDER AND FIREMEN-3552

2022-ம் வருட இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் விண்ணப்ப செயல்முறை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பம் தொடங்கும். இணைய வழியில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 3552

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:

பிரிவுஉச்ச வயது வரம்பு
பொதுப் பிரிவு26 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்28 வயது
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர்31 வயது
திருநங்கைகள்31 வயது
ஆதரவற்ற விதவைகள்37 வயது
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்47 வயது



2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

தேர்வுக் கட்டணம்: ரூ 250/-
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

More Details👉https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php


27/06/2022

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

 மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள்.



சென்னை : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார் எல்லாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை கடந்து விட்ட நிலையில், பணம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற இன்னும் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது. இதனால், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதனை எதிர்கொள்ள முடியாமல், அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களும் மலுப்பலான பதிலை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஜுலை மாதம் முதல் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


இந்த நிலையில், ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது :- மாணவிகள் 6 முதல் 12 வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உயர்கல்வி பயில வேண்டும். தனியார் பள்ளியில் RTE-ன் கீழ் 6 முதல் 8 வரை பயின்ற பின் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தாலும் திட்டத்தில் பயன்பெறலாம்.


தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-23ல் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன்பெற முடியாது. இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவம் பயிலும் அனைத்து மாணவிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏

Central University PG-CUET:EXTEND TO UPTO JULY 4,2022

 Central University PG-CUET:EXTEND TO  JULY 4,2022

பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை  ஏற்று, முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜூன் 18 முதல், ஜுலை 4  வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,Pondicherry Central University,ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மே-19 முதல் தொடங்கியது.  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 (நேற்று) என்று  அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது

25/06/2022

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்பு-Last Date : 22/7/2022

 


சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:இளங்கலை-காட்சிக்கலை எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் , தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2022-23ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்).

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடைலாம்.


இதற்கான விண்ணப்பங்களை 24ம் தேதி முதல் ஜூலை 22 வரை தபால் மூலமாக பெற்றோ அல்லது www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு ஜூலை 27 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் - தமிழக அரசு

 சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்

இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் இன்று மாலை 6 மணி முதல் 27ம் தேதி மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 28ம் தேதி மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.


இணையத்தில் பதிவு செய்யும் மாணவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமான சான்றிதழை குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

24/06/2022

Direct Recruitment for the post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering / Non-Engineering) Tamil Nadu Educational Service for the year 2017-2018

 Direct Recruitment for the post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering / Non-Engineering) Tamil Nadu Educational Service for the year 2017-2018.


 List of Candidates Called for Certificate Verification 


Any grievance/representation regarding this list of Candidates for Certificate Verification should be sent to Teachers Recruitment Board’s URL Link only

https://forms.gle/jHNCd19uc3mcLw6p9 

within 3 days from the date of release of the aforesaid list. No other mode of grievance/representation will be accepted.


👉Click here listof candidate shortlisted for CV


இன்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. 

இதனையடுத்து, தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. தற்போது முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு முடிவு அறிய

கிளிக்

பண்ணுங்க

👇

http://www.tnresults.nic.in


http://www.dge.tn.gov.in/


🙏





 

மத்திய பல்கலைகழகங்களில் UG பயில நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

மத்திய பல்கலைகழகங்களில் UG பயில நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க

இன்றே கடைசி நாள்


Apply online

👇

https://cuet.samarth.ac.in




Govt (ITI) தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை. Last Date:20/7/2022-


தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 


Last Date:20/7/2022