Search This Blog

11/06/2022

IIM நுழைவு தேர்வு விண்ணப்பிக்க 15/6/2022 வரை கால அவகாசம் நீட்டிப்பு

 சென்னை:'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. - பி.ஜி.பி. உட்பட ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் 'ஜிப்மேட்' என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. வரும் 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான 'ஜிப்மேட்' நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு 9ம் தேதியுடன் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று கால அவகாசம் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் jipmat.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் தகவல்களைwww.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011- - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணிலும் விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது

IBPS RRB Recruitment 2022 for 8106 Clerk/PO Posts @ibps.in: Last date-27-6-2022



 IBPS RRB Recruitment 2022 for 8106 Clerk/PO Posts @ibps.in: Last date-27-6-2022

IBPS RRB 2022 Recruitment Notification: Institute of Banking Personnel Selection (IBPS) has notified a huge number of vacancies for recruitment of as Office Assistant, Officer Scale-I (Assistant Manager) and Officer Scale 2 (Manager) and Office Scale 3 (Senior Manager) under Regional Rural Banks of India (RRB).

A total of 8106 vacancies are available for Group “A”-Officers (Scale-I, II & III) and Group “B”-Office Assistant (Multipurpose) Posts. Any eligible candidate, who aspires to join any of the 43 Regional Rural Banks listed at (A) is required to register for the Common Recruitment Process (CRP for RRBs- XI).

IBPS RRB Prelims exam for IBPS RRB PO 2022 and IBPS RRB Clerk 2022 is scheduled to be held from 07 August to 21 August 2022. The dates are tentative and can be changed.

IBPS Exam for Officer Scale 2 and 3 will be held on 24 September 2022 which is a single exam under the selection process. However, the main exam will be held for the post of PO and Clerk for those who would clear the IBPS RRB Prelims Exam 2022.

Last Date:27/6/2022.

For More Details contact👉https://ibps.in/






Madras School of Economics Admission 2022 – Registration Begins for B.A , M.A Programmes. Last dates :13/6/2022



 Madras School of Economics Admission 2022 – Registration Begins for B.A , M.A Programmes. Madras School of Economics (MSE) invites applications for admission to 2-Year (4 Semesters) M.A. Programs in (i) General Economics, (ii) Applied Quantitative Finance, (iii) Financial Economics (iv), Actuarial Economics and (v) Environmental Economics. Candidates can fill the application form online at www.mse.ac.in.


10/06/2022

AIR FORCE COMMON ADMISSION TEST (AFCAT- 02/2022).Last Date:30/6/2022


Indian Air Force invites Indian citizens (Men and Women) to be part of this elite force as Group A Gazetted Officers in Flying and Ground Duty (Technical and Non-Technical) branches. 

Online AFCAT examination will be conducted on 26 Aug 22, 27 Aug 22 and 28 Aug 22.

How to Apply. Aspirants for IAF are required to apply online Using the link https://afcat.cdac.in. Aadhaar Card is mandatory for online. 

For more info.👉Click Here

Or

 Click👉 https://afcat.cdac.in

🙏



RECRUITMENT OF JUNIOR EXECUTIVES IN AIR TRAFFIC CONTROL-Last date:14/7/2022

  •  

RECRUITMENT OF JUNIOR EXECUTIVES IN AIR TRAFFIC CONTROL-Last date:14/7/2022

Educational qualification:

Full Time Regular Bachelors' 

Degree of three years in 

Science (B.Sc) with Physics 

and Mathematics. 

OR

Full Time Regular Bachelor's 

Degree in Engineering in any 

discipline. (Physics & 

Mathematics should be 

subjects in any one of the 

semesters curriculum). 

Age limit: Maximum age limit is 27 years as on 14.07.2022.

IMPORTANT DATES:

Opening date for On-line Application 15.06.2022

Last date for On-line Application 14.07.2022

Tentative Date of On-line Examination Will be announced on AAI Website

www.aai.aero


👉Advertisement



08/06/2022

IIT MADRAS வழங்கும் Out Of The Box Thinking பயிற்சி. கடைசி நாள் 24-6-2022 . Extended Last date: 10/7/2022




ம்மில் பலருக்கு கணிதம் என்றாலே ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதை போக்கும் விதமாக புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தவும், அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் பரந்து சிந்தித்து அணுக ( அவுட் ஆப் பாக்ஸ் ) உதவும் வகையிலும் இணையதள வழியாக புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்த பயிற்சித் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூன் 6 -ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1-ம் தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சி முடிந்து தேர்வின்போது மட்டும் ஒரு சிறு தொகை சான்றிதழுக்காக வசூலிக்கப்படும். இறுதித் தேர்வு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடத்தப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


இது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் "இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இதன் பயன்கள் பின்வரும் காலங்களில் நிச்சயம் தெரியவரும். ஒரு பிரச்னையை அறிவியல் பூர்வமாக அணுகி அதற்குத் தீர்வு காண வைப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம்.. 

இந்தப் பாடத்திட்டத்தில் அதை கணிதம் வாயிலாகச் சொல்லித் தரவிருக்கிறோம் என்றார்.

மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரியபட்டா கணித அறிவியல் நிறுவனரும் இயக்குநருமான பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றி வருபவர் இவர். இது குறித்து அவர் கூறுகையில் " கணிதத்தை வெறும் பாடமாக இல்லாமல், ஆர்வத்துடன் அணுகினால் நிச்சயம் அது மேஜிக் அல்ல லாஜிக்தான் என்பது தெரியவரும். நம் அறிவும் அதற்கேற்றாற்போல் மேம்படும். இன்று டெக்னாலஜிக்கு ஏற்றார்போல் நம் திறனை வளர்த்துக்கொள்ளவதற்குக் கணிதம் அவசியமாகிறது. அதை இப்பாடத்தில் சேர்த்துள்ளார்கள்" என்றார்.


Registrations Close on 10th July 2022 , Sunday.
Course starts on 13th - July 2022, Wednesday

🙏











பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்__அமைச்சர் பொன்முடி .

பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. 

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



பொறியியல் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு 20-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினம் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி இறுதி நாள். 22-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.

ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

 ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

🙏






04/06/2022

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - TRB

🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    🔰    




சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ ✔ 

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

6.33 லட்சம் பேர் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிகாரி தகவல்

 இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முயற்சி திருவினை ஆக்கும்

💢💢💢💢💢💢💢💢💢

🙏




31/05/2022

விண்வெளி அறிவியலை இலவசமாக கற்க ISRO அழைக்கிறது.

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இலவச ஆன்லைன் விண்வெளி அறிவியல் படிப்புக்கு 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.


விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் மேலோட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடநெறியானது விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு அறிவையும் விழிப்புணர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

  • இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஒரு மாத படிப்பு 6 ஜூன் 2022 முதல் தொடங்குகிறது.
  • இது பிரபல விண்வெளி அறிவியலாளர்களால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பு
  • ஒவ்வொரு வீடியோ அமர்வுக்குப் பிறகும் ஒரு வினாடி வினா நடத்தப்படும்.
  • மாணவர்களுக்கு IIRS-இஸ்ரோ சான்றிதழ்கள் வழங்கும்.
  • பாடத்திட்டத்தில் விண்வெளி தொழில்நுட்பம், விண்கல அமைப்புகள், வானியல், விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் வானிலை, கிரக புவி அறிவியல் போன்றவை உள்ளன.
  • மாணவர்கள் தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கான செயற்கைக்கோள் படங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்
  • ஆன்லைன் தரவுக் களஞ்சியங்களிலிருந்து ஜியோடேட்டாவை அணுகும் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
  • பாடப் பங்கேற்புச் சான்றிதழைப் பெற, வினாடி வினாவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், வீடியோ அமர்வுகளில் 70 சதவீத வருகையும் அவசியம்.
  • ஆங்கில வழி படிப்பு இது
  • மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கலந்துரையாடல்களில் பதிவு செய்யலாம்
  • படிப்பின் கடைசி நாள் வரை மாணவர்களுக்கு அனைத்து அமர்வுகளின் கானொளிகளை அணுகும் வசதி அளிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் படிப்புக்குப் பதிவு செய்யவும்.
  • உள்நுழைவுத் தரவுகள் (கடவுச்சொல்)உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
  • பதிவு செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ சிற்றேட்டைப் பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

  • பாடநெறி தொடங்கும் தேதி - 6 ஜூன் 2022.
  • பாடநெறியின் முடிவு தேதி - 5 ஜூலை 2022.

கூடுதல் தகவல்களுக்கு:

நன்றி:இந்துதமிழ்


NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II), 2022,Last Date: 7/6/2022





 


For more info-->Notification

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2022 [INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE . Last Date : 7/6/2022



For more info. 👉Notification


Apply online👉Click Here


🙏


 

30/05/2022

10 STD , PUBLIC QUESTIONS AND ANSWER KEY MAY-2022

 10th STD 

PUBLIC

 QUESTIONS AND ANSWERS KEY

 MAY-2022

👇

Click Here


🙏

அமைப்பு

S.Saravanan.

P.G.Asst(Maths)

G.H.S.School

Valliyoor

Tirunelveli (District)

💢💢💢💢💢💢



                            







29/05/2022

12 STD , PUBLIC QUESTIONS AND OFFICIAL ANSWER KEY MAY-2022


 12 STD 

 PUBLIC

 QUESTIONS AND ANSWERS

MAY 2022

TAMIL👉Question

                👉Answer

ENGLISH👉 Question   

                    👉Answer

MATHS👉 Question   

               👉Answer  T/M  -  E/M

PHYSICS👉Question

                 👉Answer  T/M  - E/M

CHEMISTRY👉Question

                     👉 Answer  T/M - E/M

COMMERCE👉Question

                     👉Answer  T/M - E/M 

ACCOUNTANCY👉Question

                     👉Answer  T/M - E/M

ECONOMICS👉Question

                      👉Answer T/M  - E/M

COMPUTER SCIENCE👉Question

                      👉Answer T/M - E/M

COMPUTER APPLICATION👉Question

                    👉Answer T/M  -  E/M

COMPUTER TECHNOLOGY👉Question

BASIC ELECTRICAL ENGG

                              👉Answer T/M

BIOLOGY👉Question

BIO-BOTANY👉Answer  T/M

                        

BIO-ZOOLOGY👉Answer T/M


🙏

அமைப்பு

S.Saravanan.

P.G.Asst(Maths)

G.H.S.School

Valliyoor

Tirunelveli (District)



                            



16/05/2022

Extending the Last Date for Registration for UG-NEET

 Extending the Last Date for Registration for UG-NEET



வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்

வாய்ப்புகள் மீண்டும் வழங்கப்படாது.


🙏

14/05/2022

வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும்.....!

 



வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார்.


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பவர், சுஷில் சந்திரா. இவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக, ராஜீவ் குமாரை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நாளையுடன் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்று, செய்தியாளர்களிடம், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேசியதாவது:
கொரோனா தொற்றின் போது உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத்தேர்தல்களை நடத்துவது கடினமான சவாலாக அமைந்தது. ஐந்து மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தியதற்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம்.
நான் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு நாள் என்பதற்கு பதிலாக வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்தில் நான்கு தேதிகளில் வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகளை சரிபார்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பது. இந்த இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சீர்திருத்தம் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அதன்படி, ஜனவரி 2 அல்லது அதற்குப் பிறகு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது இந்த சீர்திருத்தத்தின் மூலம், ஒருவர் 18 வயது நிறைவடையும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, ஒரு வருடத்தில் நான்கு தேதிகளில் பதிவு செய்ய முகாம் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகளை சரிபார்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதால், தேர்தல் எப்போது நடைபெறும் மற்றும் வாக்காளர்களின் தொலைபேசி எண்களில் பூத் (விவரங்கள்) போன்ற கூடுதல் சேவைகளை நாங்கள் வழங்க முடியும். வாக்காளர் பட்டியலுடன் (வாக்காளர் ஐடி) ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும்.

இது தொடர்பான வரைவு முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே அனுப்பி உள்ளோம். ஆதார் விவரங்களைப் பகிர்வது தன்னார்வ விருப்பமாக இருக்கும். ஆனால் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை கொடுக்காததற்கு போதுமான தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
👆

🙏





11/05/2022

TNPSC GROUP II மற்றும் IIA Hall ticket வெளியிடப்பட்டுள்ளது.

 TNPSC 

GROUP II மற்றும் IIA 

Hall ticket

 வெளியிடப்பட்டுள்ளது.


Download hall ticket. 👉   Click here

தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

💢💢💢💢💢💢💢💢💢💢

🙏