Search This Blog

18/04/2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.



 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.




 





🙏








15/04/2021

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் -- தமிழக அரசு

 



கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

12/04/2021

UPSC ANNOUNCED ISS,IES,ENGG EXAMINATIONS, Last Date--27/4/2021.


UPSC announced the following Examinations


Indian Statistical Service Examination-2021--Degree in Maths/Statistics/Equivalent

Indian Economic Service Examination-2021---PG degree  Economics /Equivalent 

Engineering Services (Preliminary / Stage I) Examination-2021---- Any Engg Degree


More details  Contact---https://www.upsc.gov.in

Last date : 27/4/2021 , 6.00 pm

Apply online 👉Click Here


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வு தேதி மாற்றி அறிவிப்பு.

 




12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வு தேதி மாற்றி அறிவிப்பு.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு  அட்டவணை




தற்போது அறிவிக்கப்பட்ட திருந்திய தேர்வு அட்டவணை

🙏

08/04/2021

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை...!

             


     

 சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

🙏




02/04/2021

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும்: தேர்தல் ஆணையம்

காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு கூறினார்.  80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஏப்.5-ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் எனவும் கூறினார். 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவித்தார்.


01/04/2021

ஆதார் (Aadhaar Card) உடன் பான் கார்டை ( PAN) இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Aadhar PAN Link: ஆதார் (Aadhar Pan Link) உடன் பான் கார்டை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. CBDT அதாவது மத்திய நேரடி வரி வாரியம் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் (Aadhar) ஆகியவற்றை இணைப்பதற்கான கடைசி தேதியாக 31 மார்ச் 2021 ஐ நிர்ணயித்தது. ஆனால் இப்போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து இந்த கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு இந்த மிகப்பெரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் (Aadhaar Card) உடன் பான் கார்டை ( PAN) இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை 'Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

முன்னதாக நேற்று மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது எனக் தெரிவித்திருந்தது. இதனால் கடைசி நாளான நேற்று இணைய தளத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்தனர். இதனால் இணைய தளம் முடங்கியது. பெரும்பாலானோரால் இணைக்க முடியவில்லை. மேலும், காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

22/03/2021

All the Higher Educational Institutions Under the Control of Higher Education Dept. Online classes to be conducted. G.O Issued



 All the Higher Educational Institutions Under the Control of Higher Education Dept. ONLINE CLASSES to be conducted.  Order Issued



💢💢💢


🙏