07/05/2025

இன்று 12 தேர்வு முடிவு வெளியாகிறது.



 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது மே 8-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. 


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் மே 8-ம் தேதி (வியாழன்) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உளளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் அறிய


👇

https://results.digilocker.gov.in


 www.tnresults.nic.in


👆


 ஆகிய இணையதள முகவரிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.



🙏🏼

No comments:

Post a Comment