31/05/2025

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம் ,கடைசி நாள் 27.6.2025

 

கடைசி நாள் 27.6.2025

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்



தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் 2.6.2025 காலை 10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மீன்வளத் தொழிற்கல்வியை வழங்கி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளைக் கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் இப்பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 1 இணைப்புத் தனியார் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சார்ந்த 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழி
தொழில்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரிமற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி OMR வளாகத்தில் உள்ள மீன்வள உயிர்தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியிலஇளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (UGC Approved) 3 வருட இளநிலை தொழில்சாஇளநிலை தொழில்சார் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், உயிரின வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை
முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன


இந்த கல்வி ஆண்டில் (2025-26), 398 மாணவர்கள் உறுப்பு கல்லூரி மூலமாகவும், 55 மாணவர்கள் தனியார் இணைப்புக் கல்லூரி மூலமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சிறப்பு ஒதுக்கீடாக அரசு வழிகாட்டுதலின்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக ஒதுக்கீடு 18 இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 4 இடங்கள், முன்னாள்ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 4 இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக
வசிப்பவர்களுக்கு 7 இடங்களும், மீனவர் சமூகத்தினருக்கு (5% & 15%) 25 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும் காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், சுயநிதி வழி மீன்வளப் பட்டப்படிப்பிற்கு (பி.எப்.எஸ்.சி) 20 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 9 இடங்களும், நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5%) கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பிற்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகின்றது. இப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 2.6.2025 அன்று காலை 10 மணி முதல்
 👇





👆


என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணம் பட்டியலினத்தவர்களுக்கு ரூ.150, மற்றவர்களுக்கு ரூ.300. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.6.2025 அன்று மாலை 5 மணி ஆகும்பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சிறப்புப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதாம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

Paraprofessional Institutes
        Paraprofessional Institute of Fisheries Technology, Madhavaram
        Paraprofessional Institute of Aquaculture, Muttukadu
        Paraprofessional Institute of Fishing Technology, Ramanathapuram

Affiliated Colleges
        St. Devasahayam Institute of Fisheries Science & Technology, Midalam, Kanyakumari


விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் என்றும், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றுபல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கலந்தாய்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விபரங்கள் பெற தொலைபேசி (04365-211090), அலைபேசி (81221 44031) மற்றும் மின்னஞ்சல் (admissionug@tnjfu.ac.in) மூலமாக அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




🙏







4 புதிய அரசு கல்லுாரிகள் முதல்வர் அறிவிப்பு

 


நடப்பு கல்வியாண்டில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி; நீலகிரி மாவட்டம் குன்னுார்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம்; சென்னை மாவட்டம் ஆலந்துார்; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி; செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை; திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார்; பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார், துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில், புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை துவக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், இப்பகுதியை சேர்ந்த 1,120 மாணவர்கள் உயர் கல்வி பெறுவர். 


புதிதாக கல்லுாரிகள் துவக்கப்படும் மாவட்டம் மற்றும் ஊர்:

1. வேலுார் மாவட்டம் - கே.வி.குப்பம்
2. திருச்சி மாவட்டம் - துறையூர்
3. கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்துார்பேட்டை
4. திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம். 




ISRO-SETU 2025- Online Course on Space Technology and Applications (June 09 – June 13, 2025) for School Teachers, Last Date to Apply June 06, 2025















Date and Duration of online training
Course DurationJune 09-13, 2025
Registration Linkhttps://jigyasa.iirs.gov.in/setu
Last Date to ApplyJune 06, 2025
Number of SeatsLimited (First-come-first-serve basis)



ALL THE BEST

🙏




 

28/05/2025

TNPSC Technical Non Interview பணிகளுக்கான தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள்: 25/6/2025


 

தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு (நேர்காணல் இல்லாத பதவிகள்)  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 21-ம் தேதி அன்று வெளியிட்டது. இதில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 27-ம் தேதி தொடங்கி ஜூன் 25-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்0 ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கலை அறிவியல் பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை கணினிவழியிலும், ஓஎம்ஆர் ஷீட் வடிவிலும் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பதவிகள் வாரியான காலியிடங்கள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை

👇

 www.tnpsc.gov.in


👆

என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 


🙏🏼


பி.இ.பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரிகள் பணி,கடைசி நாள் : 29-5-2025

 




பணி: லெப்டினென்ட்: டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்- டிஜிசி- 142.

காலியிடங்கள்: 30.

வயது வரம்பு: 01.01.2026 அன்று 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.56,100- 1,77,500. தகுதி: சிவில்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ டெலிகம்யூனிகேசன்/அவியோனிக்ஸ்/ ஏரோநாட்டிக்கல்/ ஏரோஸ்பேஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங்/ ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ ரூரல் சிவில் இன்ஜினியரிங் /என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்/நானோ டெக்னாலஜி/ ஆர்ட்டிபிஷியல் இன்ஜினியரிங்/ மிஷின் லேனிங்/ ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ்/சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.உடற்தகுதி தேர்வு: உயரம்- 157.5 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 2.4 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்கள் 30 வினாடிக்குள் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-40, சிட்அப்ஸ்-30, புல்அப்ஸ்-6 மற்றும் செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.அவர்களுக்கு டேராடூனிலுள்ள இந்திய ராணுவ அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். 2026 ஜனவரியில் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள், இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட்டாக பணியமர்த்தப்படுவர். விண்ணப்பதாரர்கள் 

👇

www.joinindianarmy.nic.in

 👆

 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


🙏

26/05/2025

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை . கடைசி நாள் : 20/6/2025




🔰🔰🔰🔰🔰



🔰🔰🔰🔰🔰
🔰🔰🔰🔰

💢💢💢💢



🐄🐘🐓🐘🐄🐃

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்

👇


 https://adm.tanuvas.ac.in


👆

 ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 20-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறியலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் பிவிஎஸ்சி படிப்பில் 45 இடங்கள், பிடெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் - 3, பால்வள தொழில்நுட்பம் - 2, கோழியின தொழில்நுட்பம் - 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.



🙏🏼




அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க அவகாசம் காலவரையின்றி நீடிப்பு

 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக் கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேரடி 2ம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும், விண்ணப்பிக்கும் வழி முறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளே இனி நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


20/05/2025

2025 கல்லூரி கனவு புத்தகம்-சிறந்த வழிகாட்டி.


 அனைத்து தகவல்களும்
உள்ளடக்கிய
புத்தகம்
கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு 
உதவும்


 பதிவிறக்கம்
செய்ய
👇
👆

🙏🏼


18/05/2025

அரசு கவின்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் இசைக் கல்லூரி சேர்க்கை. அறிவிப்பு

 



தமிழ்நாடு அரசு

லைபண்பாட்டுத் துறை


அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம்/மதுரை

(Last  Date : 30/6/2025) 





அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம்

(Last Date : 30/6/2025) 




தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

(சென்னை,மதுரை, கோயம்பத்தூர் & திருவையாறு) 

(Last Date : 26-5-2025






(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு.) 

மாணவர் சேர்க்கை அறிவிப்பு











More info and Online Application portal

👇

https://artandculture.tn.gov.in/music-and-fine-arts-university



🙏🏼

16/05/2025

D.El.Ed மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித் துறை அனுமதி

 தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (D.El.Ed) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: தமிழகத்தில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 25 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதையேற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை இணையவழியில் ஜூன் 6ம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், சாதி வாரியாக மாணவர்கள் ஜூன் 14-ம் தேதி தேர்வு செய்யப் படுவார்கள். அதன்பின் வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப் படும். பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும். இது தவிர நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல், நடப்பாண்டு டிடெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அதற்காக முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப் படும். அதற்கேற்ப கல்வியாண்டு ஜூன் முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

15/05/2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு M.A தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு. கடைசி நாள் ; 16-6-2025


 பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு ((Five Years Integrated Post Graduate M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

இப்படிப்பில் வரும் கல்வி ஆண்டுக்கான (2025-2026) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தையும் விளக்கவுரையையும்


 www.ulakaththamizh.in 


என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இக்கல்வி நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதி உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113" என்ற முகவரியில் ஜூன் 16-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய 044 - 22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எது சிறந்த பொறியியல் கல்லூரி எப்படி தேர்ந்தெடுப்பது?.


🔰🔰🔰🔰🔰

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

மாணவர்களுக்குச் சில யோசனைகள்:

🎯பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலையும் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பது குறித்த விருப்ப வரிசையையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.


🎯  டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும். 


🎯அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருக்கும். அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை டியூஷன் ஃபீஸ் தவிர, மற்ற கட்டணங்கள் எவ்வளவு என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது.


🎯அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள கையேடு, நாம் சேர விரும்பும் கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்த்தும் சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.


🎯ஏற்கெனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் கல்லூரிகளிலும் முதுநிலைப் படிப்புகள் உள்ள கல்லூரி களிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்கும் என நம்பலாம். ஆனால், பல ஆண்டுகளாக உள்ள கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கக் கூடும் என்பதையும் புதிய கல்லூரிகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.


🎯பொறியியல் கல்லூரிகள் குறித்துப் பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிவிடக் கூடாது. பிரம்மாண்டமான கட்டிடங்கள் இருப்பதால் மட்டுமே அது சிறந்த கல்வி நிறுவனம் ஆகிவிடாது. அங்கு ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

 

🎯மிக முக்கியமாக அக்கல்லூரியில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக் கிறார்களா என்பதையும், கல்லூரிகளில் பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர் களின் வேலை வாய்ப்புக்கு உதவும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். 


🎯தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு, அக்கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதுடன், அக்கல்லூரியில் படித்துவரும் மாணவர்களிடம் அக்கல்லூரியின் நிறைகுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று பார்ப்பது சாத்தியமல்ல என்றாலும் விருப்பப் பட்டியலில் உள்ள சில கல்லூரிகளுக்காவது நேரடியாகச் சென்று பார்க்கலாம்.


🎯நாம் சேர விரும்பும் கல்லூரியில் கடந்த ஆண்டு எத்தனை சதவீத இடங்கள் பூர்த்தியாகியுள்ளன என்பதையும், கல்லூரியில் மாணவர் தேர்ச்சி விகிதம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் பார்த்து சேர விரும்பும் கல்லூரிகளின் தரத்தைப் புரிந்துகொள்ளலாம்.


🎯சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்துதான் பிரபலமான தொழில் நிறுவனங்கள் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன. எனவே, நாம் சேர விரும்பும் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 


🎯பொறியியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பாடப்பிரிவில் எந்தவிதமான பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன, அந்தப் படிப்பை சிரமமில்லாமல் படிக்க முடியுமா, அந்தப் படிப்பைப் படித்தால் எந்தெந்த வேலைகளுக்குப் போகலாம் என்பதை மாணவர்கள் முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது. இது பற்றி ஆசிரியர்களிடமும் சீனியர் மாணவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 


🎯பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் ஏராளமான மாணவர்கள் போட்டிபோட்டு கொண்டு சேர்வார்கள். அந்தப் பாடப்பிரிவுதான் சிறந்தது என்றும் அந்தப் பாடப்பிரிவைப் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் நல்ல வேலை கிடைக்கும் என்றும் நினைக்க வேண்டாம். பொறியியல் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவைப் படித்தாலும் அதில் சிறப்பாகப் படிக்கிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது


🎯மாணவர்களின் விருப்பத்துக்கு மாறான படிப்புகளில் சேரும்படி மாணவர்களைப் பெற்றோர் கட்டாயப் படுத்தக் கூடாது. ஆர்வமில்லாத படிப்பு களில் மாணவர்கள் சேரும்போது, அந்தப் படிப்பே சில நேரம் மாணவர்களுக்கு சுமையாகிவிடக்கூடும். 


🎯மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஆர்வம், திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் சேர்வது என்பதைப் பெற்றோரும் மாணவரும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்ய வேண்டும்.


நன்றி. 

இந்து தமிழ் இசை.


🙏🏼











Brakes India - TN Govt இணைந்து வழங்கும் வேலை வாய்ப்புடன் கூடிய Diploma Course.



பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளைத் தொடங்குவதற்காக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது .

அதன்படி பாடநெறி இலவசமாக நடத்தப்படுகிறது மற்றும் மாதந்தோறும் ₹12,500 உதவித்தொகையும் இதில் அடங்கும், இது கற்றல் மற்றும் நிதி உதவி இரண்டையும் உறுதி செய்கிறது.

தொழில்துறை பராமரிப்பு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா இந்த திட்டங்கள் எங்கள் பிரேக்ஸ் இந்தியா தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும், இது மாணவர்களுக்கு தொழில்துறை தொடர்பான திறன்களை வழங்கும். மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. கோவி செழியன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை தயார்நிலைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

வேலைக்கான உத்திரவாதத்துடன் இலவச பயிற்சி பெற உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

  Tnpoly.in வழியாக விண்ணப்பிக்க
👇

அல்லது



Brakes India
வழிவிண்ணப்பிக்க
👇






🙏🏼