11/09/2025

Kanya Kumari disrict maths one mark test question.



Volume 1 and Chapter-12

 Tamil medium-->Click here

English medium-->Click here



🔰🔰🔰🔰

07/09/2025

NIOS to introduce Tamil Medium in Plus-2, New Vocational and Sports Subjects.




 The National Institute of Open Schooling (NIOS), functioning under the Union Education Ministry, is set to expand its offerings by introducing Tamil medium education for Plus-2 courses and launching new subjects focused on vocational skills and sports.

NIOS Chairman Akhilesh Mishra announced that Tamil medium instruction will be introduced in Plus-2 by the end of this year. Currently, NIOS offers classes for standards 3, 5, 8, 10, and Plus-2, with 39 subjects at Class 10 level in 19 languages, including Tamil, and 44 subjects at Plus-2 level in seven languages such as English, Sanskrit, Hindi, Urdu, Bengali, Gujarati, and Odia.

To enhance vocational education, NIOS has signed an MoU with Tamil Nadu Veterinary and Animal Sciences University to offer certificate programmes in poultry farming and vermicompost production, as well as diploma courses in food and beverage, bakery, and confectionery production. Admissions for these courses will begin soon.

Additionally, to support athletes and students balancing academics with sports training, NIOS will introduce sports-oriented subjects from the next academic year. For Class 10, new subjects such as Yoga, Food Technology, and Sports Management will be added, while Class 12 students can opt for Yoga Science and Sports Management.

Textbooks for these courses are in the final stages of preparation.

NIOS EQUIVALANCEY ISSUED BY TN GOVT


🙏

ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி


 மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். தமிழகத்​தில் கடைசி​யாக, கடந்த 2022-ம் ஆண்​டுக்​கான டெட் தேர்வு 2023 பிப்​ர​வரி​யில் நடத்​தப்​பட்​டது. 2023, 2024-ம் ஆண்​டு​களுக்​கான டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு அன்​றைய தினமே தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள் டெட் முதல் தாள் தேர்​வுக்​கும் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் 2-ம் தாள் தேர்​வுக்​கும் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். நவம்​பர் 15, 16-ம் தேதி​களில் தேர்​வு​கள் நடை​பெற உள்​ளன.

டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் இன்றுடன் (செப்​.8) நிறைவடைகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும்

  https://trb.tn.gov.in 

என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் இன்று மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

அரசுப் பள்ளி மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராக பணிபுரிய​வும், பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது கட்​டா​யம் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் தீர்ப்​பளித்​துள்​ளது. எனவே, ஆசிரியர்​கள் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வசதி​யாக கால அவகாசம் நீட்​டிக்​கப்​படலாம்​ என்று தெரிகிறது.

06/09/2025

செப்.5: ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

 


ந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், முதல் குடியரசுத் துணைத் தலைவரும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் அளவுக்கு முன்னுதாரணர்.

திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1888 செப்டம்பர் 5இல் பிறந்தார் ராதாகிருஷ்ணன். ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூர், திருத்தணியில் படித்தார். தொடர்ந்து திருப்பதி லுத்தரன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் உயர்கல்வியை முடித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் தத்துவவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து, படித்தார்.

உயர் கல்வியை முடித்த பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளர் பணி அவருக்குக் கிடைத்தது. பிறகு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும், பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். தொடக்க நாட்களி லிருந்தே தனது மாணவர்களிடையே மிகவும் பிரபலமானவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார். 

அந்த அளவுக்கு மாணவர் களோடு நெருக்கமாக இருந்தார். 30 வயதுக்குள்ளாகவே பேராசிரியர் பணியை அவர் அடைந்தது இன்னொரு சிறப்பு. அவர் எழுதிய ‘இந்திய தத்துவம்’ என்கிற நூல் மூலம் பல வெளிநாடுகளில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. 

முதலில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் (1931-36), பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (1939), 1946இல் யுனெஸ்கோவின் தூதர் என ராதாகிருஷ்ணன் சேவையாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் பல்கலைக் கழகக் கல்வி ஆணைய தலைவராக உயர்ந்து, பல பரிந்துரைகளை வழங் கினார். அவை உயர்கல்விக்கான சிறந்த கல்வித் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தன. சிறந்த கல்வியாளராக விளங்கிய அவர், நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக 1952இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு 1962இல் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தார்.

ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரான பிறகு அவருடைய நண்பர்களும், மாணவர்களும் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். அப்போது, ராதாகிருஷ்ணன், ’என் பிறந்த நாளைத் தனித்தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாகக் கடைப் பிடித்தால் அது எனக்குப் பெருமை யாக இருக்கும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது முதலே இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தினத்தை வெறுமனே பெயரளவில் கொண்டாடாமல், கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லா சிரியர் விருதுகள் வழங்கி, மத்திய, மாநில அரசுகள் கௌரவிப்பது, ஆசிரியர் பணிக்கு மட்டுமல்ல, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் செய்து வருகிற மரியாதை ஆகும்.